Tuesday 19 June 2012

செயல்வழி கற்றலா? சமச்சீர் கல்வியா? ஆசிரியர்களுக்கு குழப்பமோ குழப்பம்!

சென்னை மாநகராட்சி யில் கடந்த 2003 - 2004 ஆம் ஆண்டில் செயல் வழிக் கற்றல் என்ற முறை அறிமுகம் செய்யப்பட் டது. இந்த முறையில் பாடப்புத்தகங்களுக்கு பதிலாக கற்றல் அட்டை கள் பயன்படுத்தப்பட் டன. படிப்பதை விட பார்த்து தெரிந்து கொள் ளும் முறையில் மாண வர்கள் நல்ல அடைவுத் திறனை பெற்றனர். இது பெரும் வரவேற்பை பெற்றது. பின்னர் இந்த செயல்வழிக் கற்றல் முறை ஒரு ஒன்றியத்துக்கு ஒரு பள்ளி வீதம் பரிட்சார்த் தமாக அறிமுகம் செய் யப்பட்டது. அதற்கு பிறகு ஒரு ஒன்றியத்துக்கு 10 பள்ளிகளில் அறி முகம் செய்யப்பட்டது.

இதையடுத்து 2007 - 2008ஆம் ஆண்டில் 1 முதல் 4ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளி களிலும் செயல்வழிக் கற்றல் முறை கொண்டு வரப்பட்டது. 5ஆம் வகுப் பில் எளிதாக்கப்பட்ட படைப்பாற்றல் கல்வி (எஸ்ஏஎல்எம்) அறிமு கம் செய்யப்பட்டது.

மேற்கண்ட இரண்டு முறையிலும் கற்றல் அட் டைகள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது. இதன் கீழ் சுமார் 37000 பள்ளிகளில் படித்த 36 லட்சம் குழந்தைகள் செயல்வழிக் கற்றல் முறையை பின்பற்றி படித்தனர்.

இதுகுறித்து 2007 - 2008ஆம் ஆண்டு என்சி இஆர்டி ஒரு சர்வே நடத் தியது. அதில் செயல்வழி கற்றல் முறையின் கீழ் தமிழகத்தில் மாணவர் கள் நல்ல கல்வித் திறன் பெற்றுள்ளதாக கண்ட றிந்தது.

செயல்வழிக் கற்றல் முறை 1 முதல் 4ஆம் வகுப்பு வரை நடத்தப் படுவதால் மாணவர்கள் பள்ளிக்கு புத்தகம் எடுத்து வரத் தேவை யில்லை. புத்தகங்களில் இடம்பெற்றுள்ள பாடங் கள் குறித்த விவரங்களே செயல் வழிக் கற்றல் அட்டையில் உள்ளதால் புத்தகங்களை வீட்டில் படிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்து விட்டது.

இந்நிலையில் ஆண்டுதோறும் இலவச புத்தகங்கள் மாணவர் களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 1 மற்றும் 6ஆம் வகுப்பு களுக்கு சமச்சீர் கல்வி கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது சமச்சீர் கல்வியை நிறுத்தி வைக்க அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள படி 1 மற்றும் 6ஆம் வகுப் புகளுக்கு சமச்சீர் கல்வி புத்தகங்களை கொடுக் கத் தொடங்கிவிட்டனர். மேலும் 3 வாரங்களுக்கு பாடம் நடத்த கூடாது என்றும் தெரிவித்துள் ளனர். இதனால் 1 மற் றும் 6ஆம் வகுப்பு சமச் சீர் கல்வி புத்தகத்தை பெறும் மாணவர்களுக்கு செயல் வழிக் கற்றலை நடத்த வேண்டுமா அல் லது சமச்சீர் கல்வியை நடத்த வேண்டுமா என்று ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.