Friday 23 May 2014

கல்வி உரிமைச்சட்டம் – 25 சதவிகிதம் : முனைவர். என்.மாதவன்

சமீபத்தில் மிகப்பெரிய விவாதம் தனியார் பள்ளிகளால் முன் வைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் கல்வி உரிமைச் சட்டத்தின்படி முதல் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசு இது வரை செலுத்தாததால் இந்த ஆண்டு அதற்கான வழியைச் செய்த பிறகே சேர்க்கை செய்ய முடியும் என்பதுதான் அது. தனியார் பள்ளிகளின் வரவு செலவில் மிகவும் குறைந்த அளவிலான தொகைக்காக இது நடப்பதாக பலரும் கருதவில்லை. மாறாக தமது சுதந்திரத்தில் அரசு தலையிடுவதை விரும்பாததையே இது வெளிப்படையாக காட்டுவதாக உள்ளது. இது தொடர்பான பேட்டிகளில் தனியார் பள்ளி நிர்வாகிகள் பலரும் முன் வைத்த கருத்துக்கள் மிகவும் முகம் சுளிக்கவே வைத்தன. உதாரணமாக அரசாங்கம் கொடுத்த கெடுபிடிகள் குறித்தும் குறிப்பாக ஒரே படிவத்தை திரும்ப திரும்ப கேட்டது குறித்தும் அங்கலாய்த்தார்கள். ( ஒரு வேலை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அரசின் கல்வி துறையும் இதில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்) மொத்தத்தில் கல்வி ஒரு வியாபாரம் நாங்கள் வியாபாரம் செய்கிறோம். உரிய கட்டணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் கொடுக்கவேண்டிய வேலைதானே அரசுடையது எங்களை ஏன் கணக்கெல்லாம் கேட்கிறீர்கள் என்கிற தொனியில் இருந்தது. 

மேம்போக்காக பார்க்கும்போது இது சரி என்று கூட தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல. அப்படியெல்லாம் அவரவர் இச்சைப்படி கல்வி நிறுவனங்கள் நடத்துவது பொது நன்மைக்கும் சமுக ஒழுங்கிற்கும் எதிரானதாகவே அமையும். . எல்லாவற்றையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். சான்றிதழை மட்டும் ஏன் அரசு கொடுக்க வேண்டும் அதையும் நாங்களே கொடுத்துக்கொள்கிறோம் என உயர்கல்வி நிலையில் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்கள் வந்துவிட்டன. நல்ல வேளையாக 12 ஆம் வகுப்பு வரையிலான சான்றிதழை அரசு கொடுப்பதால் அதுவரையாவது தனியார் நிறுவனங்கள் அரசை மதிக்கவேண்டிய நிலை உள்ளது. உண்மையில் கல்வி என்பது வேலை வாய்ப்புக்கானது என்ற நிலை மேன்மேலும் அதிகரிக்க அதிகரிக்க இது போன்ற சான்றிதழ் விற்பனை கன ஜோராகவே நடக்கும். தனியார் கையில் அனைத்து வகையான சான்றிதழ்களும் கிடைக்கும் நிலை வந்த பிறகு யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு உள்ளதோ அவரவர்கள் தங்கள் தேவைக்கேற்ப வாங்கி முன்னேற முற்படுவர். ஒரு கால கட்டம் வரை இது சரியாகவும் முதலில் முந்துவோருக்கு நல்ல வேலை நல்ல சம்பளம் கிடைக்கும் பின்னர் குறிப்பிட்ட சான்றிதழுக்கான தேவை குறையக் குறைய நல்ல சம்பளம் என்பது கானல் நீராகும்.
இந்தியாவிலேயே அதிக பொறியியல் கல்லூரிகளைக் கொண்ட தமிழகத்தில் பொறியாளர்கள் ஐயாயிரத்துக்கும் பத்தாயிரத்துக்கும் வேலைக்குச் செல்லும் அவலத்தினை இன்று நாம் கண்டுகொண்டிருப்பது அதற்கு உதாரணம். எது எப்படியிருப்பினும் கல்வியில் தனியார் மயமாக்கத்தினைக் கட்டுப்படுத்துவது என்பது அவசர அவசியம். குறிப்பாக துவக்கக் கல்வியிலும் இடைநிலைக் கல்வியிலும் சமநிலையினைக் கொண்டுவர துவக்கப் புள்ளியாகப் பார்க்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 25 சதவிகித இட ஒதுக்கீடு என்பது படும்பாட்டை வைத்தே கல்வி உரிமைச் சட்டத்தின் கையறு நிலையினை புரிந்துகொள்ள இயலும். கொஞ்சம் கல்வி உரிமைச் சட்டத்தின் வரவுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வுகளைப் பட்டியிட்டுவிட்டு பின்னர் விஷயத்திற்கு வரலாம். 

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இருப்போர். அவரவர்களது சொந்த நலன்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாதவாறு இருப்பதை உறுதி செய்தபின்னர் மக்களில் சிலர் கல்வி பெறுவதை அனுமதித்தனர். . குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் கல்வி, குறிப்பிட்ட பிரிவினருக்கு குறிப்பிட்ட கல்வி, குறிப்பிட்ட கல்வி மட்டுமே அனைவருக்கும் என பல்வேறு காலகட்டங்களை கடந்து இன்று கல்வி பெறுவது குறிப்பாக இந்தியாவில் 6 முதல் 14 வயது வரையுள்ள அனைத்துக் குழந்தைகளுக்கு கல்வி பெறும் அடிப்படை உரிமை கிடைத்துள்ளது. இந்த உரிமையும் பல்லாண்டு கால போராட்டங்களுக்கு பிறகே பெறப்ப்பட்ட்து. இந்த இடத்தில் கல்வி அடிப்படை உரிமை என்றாகும்போது, உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றுக்கு நிகரானது கல்வி என்று பொருள் கொள்வது அவசியம். 
இந்நிலையில் அனைவருக்கும் கல்வி பெறும் உரிமை என்பது விரைவில் தரமான, சமமான கல்வி பெறுவது உரிமை என்றாகவேண்டும். கோத்தாரிக் கல்விக்குழு உள்ளிட்ட கல்விக்குழுக்கள் கல்வி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்காமல் அனைவருக்கும் சமமான தரமான கல்வியினை அளிக்க இயலாது என அழுத்தம் திருத்தமாக பரிந்துரைத்தன. ஆனாலும் இடையில் ஏற்பட்ட பல்வேறு கோளாறுகளால் குறிப்பாக தமிழகத்தில் தனியார் கல்விக் கூடங்கள் பல்கிப்பெருகின. உயர் கல்வி முழுவதும் ஆங்கிலத்திலேயே இருந்த நிலையில் வாய்ப்புள்ள சமூகத்தினர் துவக்கம் முதலே ஆங்கில வழியில் கற்பிக்க இந்த பள்ளிகள் உதவின. தமிழிலேயே அனைத்து உயர்கல்வியும் பெற இயலும் என்ற நம்பிக்கையினை இதுவரை விதைக்க இயலாத சூழலில் பெற்றோரின் விருப்பம் என்ற நிலையிலேயே இன்று வரை ஆயிரக்கணக்கான பள்ளிகள் முளைத்து வருகின்றன. இதனிடையே தமிழ் வழிக்கல்வியில் நம்பிக்கை இழந்த நிலையில் அரசே துவக்கக் கல்வியினை ஆங்கில வழியில் அளிக்க முயற்சிக்கிறது. அரசு பள்ளி ஆசிரியர்களின் தொழில்சார் நெறியும் பொறுப்புணர்வும் மேன் மேலும் மேம்படவேண்டிய சூழலில் இது எந்த் அளவுக்கு வெற்றி பெறும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். இது ஒரு பக்கம் என்றால் மறுபக்கம் உயர்நிலை மேநிலைப்பள்ளிகளில் தனியார் பள்ளிகள் போல 9 ஆம் வகுப்பில் அடுத்த பள்ளிக்கு துரத்தாமல் தங்களால் இயன்றவரை கற்பிக்கும் கண்ணியமிக்க ஆசிரியர்களையும் நாம் கண்டிப்பாக அடையாளம் கண்டு பாராட்டவேண்டும். இவர்களின் எண்ணிக்கை கணிசமாக உள்ளதும் ஒருவகையில் ஆரோக்கியமான விஷயம். 
சரி இது இவ்வாறு இருக்கட்டும். கல்வி உரிமைச் சட்டம் 25 சதவிகித குழந்தைகளை சேர்க்கவேண்டும். என்று வரையறுத்துள்ளதை அனைவரும் பள்ளியின் முழு எண்ணிக்கையில் 25 சதவிகிதம் என்று புரிந்துகொண்டு இது எப்படி சரியாக இருக்கும் என்று வாதிடுவதும் நடக்கிறது. குறிப்பாக 500 குழந்தைகள் பயிலும் பள்ளிகளில் 125 இடங்கள் என அது அப்படியல்ல. தனியார் பள்ளியில் எது புகும் நிலை வகுப்போ அதில் 25 சதவிகிதம்தான். அதாவது 30 இடங்களில் 25%. அடுத்த ஆண்டு இந்த குழந்தைகள் அடுத்த வகுப்பிற்குச் செல்வர் இப்படியாக 5 ஆம் வகுப்பு வரை 25 அடைய 5 வருடங்களாவது ஆகும். . 
ஒரு வகையில் ஒரு பகுதியிலுள்ள அனைத்துப் பிரிவைச்சேர்ந்த குழந்தைகளும் ஒரே பள்ளியில் சமமான தரமான கல்வி பயில்வதனை ஒரளவாவது உறுதி செய்யும் என்ற வகையில் இதனை கல்வி உரிமைச் சட்டம் வலியுறுத்துகிறது. ஆனால் உண்மையான சமூக ஆர்வலர்களின் கருத்தின்படி இது கூட சரியல்ல அனைத்துக்குழந்தைகளும் தங்கள் அண்டையிலுள்ள அரசின் பொதுப்பள்ளியில் பயில்வதே இதனை உறுதி செய்யும். அந்த கனவினை நனவாக்க இன்னும் பல காலம் தேவைப்படலாம். .இன்னும் இன்னொரு படி மேலே போய் யோசிப்போமேயானால் அனைவரும் தாம் எந்த பகுதியில் வசிக்கிறோமோ எந்த இடத்தில் நமக்கு குடியுரிமை உள்ளதோ அந்த இடத்திலுள்ள பள்ளியில் தமது குழந்தைகளை சேர்ப்பதே அருகாமைப்பள்ளி ஆகும். இது போன்ற நடைமுறையில் சமூகத்தில் பொருளாதார ரீதியாக வசதியானவர்களும், அரசியல் பிரமுகர்களும், அரசு நிர்வாகத்துறையினை இயக்குபவர்களும், அரசின் சகலவிதமான ஊழியர்களும் தமது குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ப்பர். இந்நிலையில் அப்பள்ளியில் நடைபெறும் போதானா முறை, கட்டமைப்பு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம், பள்ளியின் நடைமுறைகள் போன்ற அனைத்தும் சரியாக நடைமுறையாகும். இதனை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசியல் விருப்புறுதி கிடைக்கும். எனவேதான் சமூக ஆர்வலர்கள் அருகாமைப்பள்ளி மற்றும் பொதுப்பள்ளியினை நடைமுறைப்படுத்தப்பட அரசினை நிர்ப்பந்திக்கின்றனர். 
சமுகத்தின் எதிர்பார்ப்பு இவ்வாறு உள்ள நிலையில் கடந்த ஆண்டு இந்த 25 சதவிகிதம் இடங்களை ஒதுக்கவேண்டும் என்று வந்த நிலையில் தனியார் பள்ளிகள் முன்வைத்த சொத்தை வாதங்கள் சிலவற்றையும் பார்ப்போம். பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் குழந்தைகளிடத்தில் அவர்கள் காட்டிய கரிசனத்தினைப் பாருங்கள் 
பின் தங்கிய வகுப்பு குழந்தைகளின் பேச்சு என்பது கொச்சையானது, அந்த குழந்தைகளும் இந்த குழந்தைகளும் இணைந்து பயில்வது மற்றும் பயிற்றுவிப்பது நடைமுறையில் சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஒழுக்கம் குறைந்த குழந்தைகளாக அவர்கள் இருப்பதால் பள்ளியில் பொருட்கள் காணாமல் போகும்.
அதிக கவனம் அந்த குழந்தைகளுக்காக செலுத்த வேண்டும். இதனால் மேல் தட்டு குழந்தைகளின் கல்வி போதிக்கும் நேரம் குறையும்.
அந்த குழந்தைகளின் கட்டணத்தை வேண்டுமானால் அரசு கொடுக்கும் ஆனால் அவர்களுக்கான சீருடை, ஷூ , சாக்ஸ், டை மற்றும் வருவது போவதற்கான செலவுகளை யார் ஏற்பது? 
பாவம் அந்த குழந்தைகள் தமக்கு வசதியான வாழ்க்கையும், ஆங்கிலக் கல்வி பெறும் தகுதி இல்லையே என தாழ்வு மனப்பான்மை கொள்வர்” என்கின்றனர்.
இன்னும் நிறைய கருத்துக்கள் உண்டு என்றாலும் இத்துடன் நிறுத்திக்கொள்வோம். கல்வி என்பதற்கான புரிதல் வேலை வாய்ப்புக்கானது, ஆங்கில அறிவினை முழுமையாக அடைவது, தன்னை சமூகத்தில் பிரித்துக் காட்டிக் கொள்ள உதவுவது என்ற பல்வேறு தவறான புரிதல்களின் விளைவும் அது சமூகத்தில் ஆழ்ந்தும், அகன்றும் பரவியுள்ளதால் வரும் விளைவு இது தமது வணிக நோக்கிற்கும், தமது தரப்பெயருக்கு (பிராண்ட்) எந்தவிதமான பாதகமும் வந்துவிடக் கூடாது. அது தமது வணிகத்தையும், லாபத்தையும் பாதிக்கும் என்ற ஆற்றாமையாலேயே வரும் வார்த்தைகள்.
அவர்களது வாதங்களிருந்து தொடங்குவோம். குழந்தைகளுக்கு மொழி நெகிழ்வான ஊடகமாக வேண்டுமானால் அவர்கள் பலதரப்பட்ட மொழியியல் சூழலில் வாழ்வது நல்லதே தவிர தீமையானதல்ல. இது தாம் பேசும் மொழியே தூய்மையான மொழி என்ற மேட்டிமையால் வருவது. உதாரணத்திற்காக ஒன்றைப் பார்ப்போம். ”இழுத்துக்கொண்டு சென்றது” என்ற சொற்றொடருக்கான இரு வகையான பயன்பாட்டைப் பார்ப்போம். ஒன்று ”இசுத்துக்கினு போச்சு” இரண்டாவதானது “இழுத்துண்டு போரது” இது இரண்டுமே தூய்மையானது இல்லையே. 
அடுத்ததாக பின் தங்கிய வகுப்பைச் சேர்ந்த குழந்தைகள் ஒழுக்கம் குறைந்தவர்களாக இருப்பர்?. . ஏழைகள் எல்லோருமே திருடர்களா? வழிப்பறி செய்பவர்களா? ஒழுக்கம் குறைந்தவர்களா? ஆத்ம சுத்தியோடு இந்த கேள்வியைக் கேட்டுக்கொள்ளுங்கள். ஏழைகள் அனைவரும் சிறையில்தான் இருக்கவேண்டும். இந்திய நாட்டின் சிறைகள் கொள்ளாது. மாறாக ஏழைகளின் தன் மானத்துடன் கூடிய வாழ்வியல் நெறிகள். இன்றும் பல அரசு பள்ளிகளில் தரையில் கிடக்கும் ரப்பர், பென்சில், நாணயம் போன்றவற்றால் தினம் தினம் நிறையும் தலைமை ஆசிரியர்கள் மேசைகள் உண்டு.
அடுத்ததாக அது போன்ற குழந்தைகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டியதால் மேல்தட்டு குழந்தைகளுக்கான செலவிடும் நேரம் குறையும். கல்வி என்பது நேரம் செலவிடுவதன் மூலம் அடையக்கூடியதல்ல. மாறாக சரியான புரிதல், சரியான நபருக்கு சரியான நேரத்தில் அடைவதே. பலதரப்பட்ட குழந்தைகளுக்கு போதிக்கத் தயாரவதே ஒவ்வொரு ஆசிரியரின் தொழில் சார் திறன்களை வளர்த்தெடுக்கும். வசதியான வீட்டு குழந்தைகள் அனைவரும் என்ன ஒரே மாதிரியான புத்திசாலிகளா என்ன? அவர்களிலும் தானே கல்வியில் பின் தங்கியவர்கள் இருப்பர். மேலும் ஆசிரியர்கள் கல்வியில் பின் தங்கிய குழந்தைகளுக்காக செலுத்தும் கவனம் என்பது சந்தேகமுள்ள இந்த குழ்ந்தைகளுக்கும் பலனளிப்பதாக இருக்கும். மாண்டிசோரி போன்ற கல்வியாளர்கள் சாதாரண உழைப்பாளி மக்களின் குழந்தைகளுக்கான கல்வி முயற்சியிலேயே கற்றுக்கொண்டது அதிகம் என்கின்றனர். 
எது எப்படியோ துவக்கக் கல்வியில் தனியார் மயமாக்கம் என்பது உயர்கல்வியை ஒப்பிடும்போது குறைவாக உள்ள சூழலிலேயே இவ்வளவு எதிர்ப்புக்குரல்கள் வருகிறது என்று சொன்னால் அடுத்த உயர்கல்வியினை அடிப்படை உரிமையாக்குவதற்கு எவ்வளவு கடினம் என்பதை புரிந்துகொள்ள இயலும். அரசு கூடுதல் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதும் சமூகத்தில் கல்வி பற்றிய சரியான புரிதல் வருவதும் அவசர அவசியம். கல்வி என்பது தனிமனிதர்களின் நடத்தையில் ஆரோக்கியமான மாற்றங்களை கொண்டுவர வல்லது என்று கல்வியாளர்களின் பலரும் வலியுறுத்தி வரும் நிலையில் அது அப்படியல்ல கல்வி என்பது வேலைவாய்ப்புக்கானது என்ற எண்ணம் அதிக அளவில் மேலோங்கி வருகிறது. எங்கும் எதிலும் வேகம் என்ற முதலாளித்துவத்தின் கனவுகளுக்கு ஈடுகொடுப்பதாகவே கல்வி மாறி வருவது சமூக அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் கேடானதாகவே முடியும். துவக்க நாட்களில் கல்வி கொடுப்பதே தமது நோக்கம் என்று கல்விக்கூடங்களைத் துவங்கிய சிறுபான்மை நிறுவனங்களின் நோக்கமும் கல்வி உரிமைச் சட்ட அமலாக்கத்தில் தெளிவாகிவிட்டது. அரசு கொடுக்காத போதே தாங்கள் கொடுக்க முன்வந்தவர்கள் இன்று அரசே முன் கை எடுக்கும்போது ஏன் பின்வாங்குகின்றனர் என்பது புரியாத புதிராக உள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தில் குழந்தைகள் உரிமை சார்ந்த பல முற்போக்கான சரத்துகள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் குழந்தைகள் பள்ளிக்குள் வந்த பிறகே செயல்படுத்த இயலும். ஆனால் பள்ளிக்குள் நுழைவதே (குறிப்பாக தனியார் பள்ளிகளில்) பிரச்சனையாக உள்ள சூழலில் எதைப் பற்றி விவாதிப்பது. எது எப்படியோ புதிய கல்வியாண்டு துவங்க உள்ள நிலையில் அறிவுள்ள தமிழ்ச்சமூகத்தின் முன்னால் பல விவாதப் பொருட்கள் உள்ளன அவற்றை அறிவுபூர்வமாக விவாதிப்பதே நம் அனைவரின் கடமை.

கட்டுரையாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத்துணைத் தலைவர்

Thursday 22 May 2014

சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளதால் பள்ளிகளில் வெவ்வேறு கட்டணம் வசூல் செய்வதை தடுக்க வேண்டும்





பதிவு செய்த நாள் : May 23 | 01:45 am
விருதுநகர்,

சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறையில் உள்ளதால் பள்ளிகளில் வெவ்வேறு கட்டணம் வசூல் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செயற்குழு கூட்டம்

தமிழ்நாடு அறிவியல் இயக்க விருதுநகர் மாவட்ட செயற் குழு கூட்டம் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பரமசிவம் வர வேற்று பேசினார். இதை தொடர்ந்து டார்பின் பரிணாம கொள்கை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு நடந்தது.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் கார்த்திகேயன் பேசினார். கூட்டத்தில் மாவட்ட தலைவர் இப்ராகீம், மாநில பிரசார குழு ஒருங்கி ணைப் பாளர் தியாகராஜன், மாநில செயலாளர் அமல் ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெவ்வேறு கட்டணம்

கூட்டத்தில் வருகிற கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், அரசு பள்ளிகளில் மழலையர் கல்வி வழங்கப் படவில்லை என்பதால் மக்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்கின்றனர். எனவே இதனால் மழலையர் வகுப்பு களுக்கே அதிகளவில் பள்ளி கள் கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே தமிழகத்தின் அனைத்து அரசு பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகளை தொடங்கி ஏழை, எளிய குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை உத்தர வாதப்படுத்த வேண்டும்.

மாநிலம் முழுவதும் சமச்சீர் பாடத்திட்டமே நடைமுறை யில் இருப்பதால் வெவ்வேறு கட்டணங்கள் பள்ளிகளில் வசூலிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும்.

தரமான கல்வி

அனைத்து பள்ளிகளிலும் தரமான வசதிகளை உத்தர வாதம் செய்து அனைத்து பகுதிகளிலும் பள்ளி கட்டணங்களை தமிழக அரசு நெறிப்படுத்த வேண்டும். ஓரே சீரான கட்டணத்தை நிர்ண யிக்க வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது. அதன் காரணமாக பல பள்ளிகள் மூடப்பட்டும் வருகின்றன. அரசு பள்ளிகள் மட்டுமே அனைவருக்கும் அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை கொடுக்க முடியும். எனவே அரசு பள்ளிகளை பாதுகாக்கவும், பலப்படுத்த வும் மாவட்ட முழுவதும் பிரசார இயக்கம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.

கூட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் மாரியம்மாள் நன்றி கூறினார்.

நன்றி: தினத்தந்தி

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாணவர் சேர்க்கை பிரசாரம்

By dn, தேனி-
First Published : 21 May 2014 01:17 AM IST

தேனியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கம் நடைபெற்றது.



தமிழ்நாடு அறிவியல் இயக்கம், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் பிரசார இயக்கத்தினை, கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கத்தினை மேற்கொள்ள, கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற மாநிலச் செயற்குழுவில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தேனி மாவட்டம் சார்பில், மாணவர் சேர்க்கையினை வலியுறுத்தி பிரசார இயக்கம், திங்கள்கிழமை தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் துவங்கப்பட்டது. பிரசாரத்தை தொடங்கி வைத்து, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்ப்பதன் அவசியம், அரசுப் பள்ளிகளில் அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரத்தை, தேனி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எம். வாசு வெளியிட்டார். இதனை, பெரியகுளம் கல்வி மாவட்ட அலுவலர் என். நாகராஜு பெற்றுக் கொண்டார்.



தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே. சுந்தர், மாவட்டத் தலைவர் பா. செந்தில்குமரன், மாவட்டச் செயலர் வி. வெங்கட்ராமன், தேனி மாவட்டக் கல்வி ஒருங்கிணைப்பாளர் க. முத்துக்கண்ணன், போடி கிளைச் செயலர் ஸ்ரீதர், மாவட்ட இணைச் செயலர் ஜேசுராஜ், பெரியகுளம் கிளைத் தலைவர் எ.எஸ். பாலசுப்ரமணியன் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர். அம்மையப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அரசுப் பள்ளி என்பது மக்கள் பள்ளி, அரசுப் பள்ளிகளால் மட்டுமே அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை வழங்கமுடியும். எனவே, அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கவேண்டும். அரசுப் பள்ளிகளைப் பலப்படுத்தவேண்டும். மேம்படுத்த வேண்டும் என பிரசாரத்தில் வலியுறுத்தப்பட்டது.

நன்றி: தினமணி

Wednesday 21 May 2014

மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம்@வெள்ளோடு

நண்பர்களே ,ஈரோடு மாவட்ட அளவில் ஆசிரியர்களுக்கான புத்தக வாசிப்பு முகாம் ஈரோட்டில் 11.1.2014,12.1.2014 சனி,ஞாயிறு அன்று நடைபெற்றது. இம்முகாமை ,பேரா.மோகனா தொடங்கி வைத்து ,ஆசிரியர்களுக்கான புத்தகங்களை அறிமுகம் செய்தார்.பின்னர் சுய அறிமுகம் செய்யப்பட்டு,வாசிப்பும்,விவாதமும் ,குழுவாக மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அமர்வாக,குழுவில் விவாதித்த கருத்துக்கள் பொது அமர்வில் வைக்கப்பட்டு,விவாதம் மேற்கொள்ளப்பட்டது.ஞாயிறு காலை "இயற்கை உலா"நடை பயணம் மேற்கொள்ளப்பட்டது.இதனை திரு.க.பரமசிவம் ஒருங்கிணைத்தார். மாநில இணை ஒருங்கிணைப்பாளர் ஜெ.பாலசரவணன், மாநிலத்தலைவர் பேரா.மணி ,ஆகியோர் இம்முகாமை பற்றிய மதிப்பீடுகளை வழங்கினர். முடிவில் மாவட்ட செயலாளர் கார்த்தி நன்றி நவிழ ,முகாம் இனிதே நிறைவுற்றது.இம்முகாமில் மாவட்டம் முழுவதும் இருந்து,42 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

































தனியார் பள்ளி கூட்டமைப்பு வாசிப்பு முகாம்

பதிவு செய்த நாள்: மே,21
கடலூர்: கடலூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் வாசிப்பு பயிற்சி முகாம் நடந்தது.மாவட்ட தலைவர் விக்டர்ஜெயசீலன் தலைமை தாங்கினார். எட்வின் எழுதிய "என் கல்வி என் உரிமை' என்ற புத்தகம் வாசிப்புக்கு தேர்வு செய்யபட்டது. அறிவியல் இயக்கத்தின் துணை தலைவர் தெரசாகேத்தரின், நூல் ஆசிரியர் எட்வின், அனைத்து குடியிருப்போர் நல சங்கத்தின் பொதுச் செயலர் மருதவாணன், பெற்றோர் மாணவர் சங்க பொதுச் செயலர் ரமேஷ்பாபு, சமூக ஆர்வலர் சுருதி மிஸ்ரா, பிரபு, ஒருகிணைப்பாளர் உதயேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மரியபிரான்சிஸ் சேவியர் நன்றி கூறினார்.
நன்றி: தினமலர்

கூடலூர் முகாம் கண்ட மாஸ்டர் யார்? :க.காந்திமதி ஈரோடு

மேற்குத் தொடர்ச்சி மலையின் தொட்டிலில் தவழும் தென்மேற்கு மூலைச் சிறுநகரம் அது. கடைக்கோடி ஊர் என்றாலும், தமிழ்நாட்டின் எந்த நகரைக் காட்டிலும் முன்னரே விழித்துக்கொள்ளும் மக்கள். அதிகாலை 3.45 மணிக்கெல்லாம் களைகட்டத் துவங்கிவிடுகிறது நகரம். வேலைக்குச் செல்லும் உழைப்பாளி மக்களால் வீதிகள் நிரம்பிவழிகிறது. அந்நேரத்திற்கே உணவகங்களும் சுறுசுறுப்பு அடைந்துவிடுகின்றன. தேநீரகங்களில் செரட்டை முட்டாஸ் (தேங்காய் செரடையில் ஊற்றி சுடப்படும் ஜேலேப்பி போன்ற ஒரு வகை இனிப்பு), பால் பன், மெதுவடை என எல்லாம் மெகா சைசில் குவிந்துகிடக்கிறது. ஹோட்டல்களில் இட்லி, தோசை, பூரி, பரோட்டா என எங்கும் காலையில் கிடைக்கும் உணவுப் பண்டங்களோடு அதிகாலை 4 மணிக்கே முழுச்சாப்பாடே 20 ரூபாய் விலையிலும் கிடைக்கிறது. வயிறு முட்டத் தின்றுவிட்டு காசை எடுத்து நீட்டும் போது, இங்கு ஏதேனும் வேலை கிடைத்து ஆயுள் முழுவதும் வாழ்ந்து விட முடியாதா என மனம் ஏங்குகிறது. இங்குள்ள உணவகங்களில் அந்தக் காலத்தில் அண்டாவில் தண்ணீரை வைத்துக் கோதி, கோதிக் குடித்ததைப் போல் குடிக்கிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு மாசற்ற நீரைப் நேரிடையாகப் பருகும் வாய்ப்புக்கிட்டியது. மூன்று புறமும் கடலால் சூழப்பட்ட இந்திய தீபகற்பத்தை ஓர் இடத்தில் இருந்து பார்க்க முடியாது. ஆனால் மூன்று புறமும் மேற்குத் தொடர்ச்சி மலையைப் போர்த்திக் கொண்டு, ஒரு புறம் தமிழ்நாட்டின் பசுமைப் பள்ளத்தாக்கு என்னும் கம்பம் பள்ளத்தாக்கோடு இணைந்து நின்று அழகு காட்டும் கூடலூர் நகரத்தை மனம் குளிரபார்க்கமுடியும்.


இந்த கூடலூர் நகரின் வளர்ச்சியில் இரண்டறக் கலந்து நிற்கும் ஒற்றை உந்து சக்தியான NSKP பொன்னையா கவுடர் மேல்நிலைப்பள்ளி . உதவி பெரும் பள்ளிகளில் மிகப் பெரும்பாலானவற்றில் தொண்டுள்ளமும், சமூகசேவையும் தொலைந்து போய் எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும், இன்றும் தூயசேவையும், கறார் தன்மையும், பணம் காசு இன்றி தகுதி அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் நீடிப்பது இதன் சிறப்பு இயல்பு. கூடலூர் நகர வீதிகளைப் போலவே இந்தப் பள்ளியும் அதிகாலை 4 மணி முதல் சுறுசுறுப்பு அடைந்துவிடுகிறது. அதன் விளையாட்டு மைதானம் நடைப்பயிற்சியாளர்கள், கூடைப்பந்து விளையாட்டாளர்கள் என நிரம்பி வழிகிறது. இந்தப் பள்ளியைத்தான் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உயிர்த்துடிப்புடன் நடத்திவரும் மாற்றுக் கல்விக்கான 10வது வாசிப்பு முகாமிற்கான இடமாக தேர்வு செய்திருந்தது தேனி மாவட்டக் குழு. 


கோடை காலத்தில் நடைபெறும் முகாம் மூன்று நாட்களாக நடைபெறுவது வழக்கம். இதன் அடிப்படையில் இந்த முகாமும் மே 3, 4, 5 தேதிகளில் நடைபெற்றது. முதல் நாள் தேக்கடி, பென்னி குவிக் நினைவு மண்டபம் என மக்கள் சுற்றிப் பார்த்துவிட்டு, உள்ளத்துள்ளலுடன் 3ஆம் தேதி மாலை 6 மணிக்கு வாசிப்பு முகாமைத் தொடங்கினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநில கல்வி உபகுழு ஒருங்கிணைப்பாளர் தேனி சுந்தர் தலைமையில், தேனி மாவட்டச் செயலாளர் வெங்கட் வரவேற்புரையாற்ற, தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலத் தலைவர் பேரா.என்.மணி துவக்கவுரையாற்றினார். வாசிப்பு முகாம் கடந்து வந்த பாதை, வாசிப்பின் முக்கியத்துவம், வாசிப்பின் அரசியல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அவரது உரை இருந்தது. 


வகுப்பறையில் வாசிப்பு முகாம்கள் எத்தகைய தாக்கத்தை செலுத்தி வருகிறது என்பதற்கு வந்திருந்தவர்களின் சாட்சியங்கள் கட்டியம் கூறியன.ஒரே ஒரு முகாம் தன் ஒட்டுமொத்த கற்றல், கற்பித்தல் முறையைஎவ்வாறு புரட்டிப் போட்டிருக்கிறது என தாட்சாயினி ஆசிரியர் விவரித்தார், "டே, நம்ம இங்கிலீஷ் டீச்சர் நெஜமாலுமே திருந்தீட்டாங்கடா." என்று த னது மாணவர்கள் பேசிக்கொள்வதை மகிழ்ச்சியுடன் பதிவு செய்தார். பத்து முகாம்களில் முழுமையாக பங்கேற்ற முருகேசன்,"தன்னை ஒரு முழுமையான ஆசிரியனாக பரிணாம வளர்ச்சி அடையச் செய்து வருகிறது வாசிப்பு இயக்கம் " என்றார் . வந்திருந்தவர்களில் பெரும் பகுதியினர் கடந்த முகாமக்களில் பங்குபெற்றவர்கள். ஒவ்வொரு பங்கேற்பாளரும் தன்னை வாசிப்பு முகாம்ங்கள் எப்படி செதுக்கி, செழுமைப்படுத்தியது என்ற வகைமையை எடுத்துக் கூறினர். சுயஅறிமுகம் என்று தொடங்கிய இந்த பகிர்தல் சுமார் இரண்டு மணி நேரத்தை துவக்கவிழாவில் எடுத்துக்கொண்டது. "இந்த முகாமில் ஒரு நூல். அடுத்த முகாமில்ஒரு நூல். படிப்பது. விவாதிப்பது. அப்படியே விட்டுவிட்டுச் செல்வதால்என்ன பயன்?" என்ற யோசிக்கும் அல்லது கேள்வி கேட்டும் விமர்சனங்களுக்குஇந்த துவக்கவிழாவே பதிலாக அமைந்தது. "தமிழ்நாடு அறிவியல்இயக்கமும் வாசிப்பு இயக்கமும் அறிமுகமானது கடந்த முகாமில் தான். ஆனால்அது எனது ஆளுமையில், கல்வி குறித்த கருத்துக்களை தைரியமாக பகிர்ந்துகொள்வதில் பெரும் பங்கு வகிக்கிறது" என்றார், திண்டுக்கல் ஆசிரியர் மனோகரன்." நான் பெற்ற இன்பத்தைத் துய்க்க என்னுடன் இம்முறை ஏழுபேரை அமைத்து வந்திருக்கிறேன்" என்றார், இராமநாதபுரம் காந்தி. "ஒவ்வொரு முகாமிற்கும் ஒருவரையாவது அழைத்து வர வேண்டும் என்பதில் இப்பொழுதுதான் வெற்றி பெற்று இருக்கிறேன் "என்றார், கரூர் ரவி. "எனது வாசிப்பின் வாசல் திறந்தது பாமாவின் கருக்கு நாவல் வழியாகத்தான். ஆனால் எனது கற்பித்தலுக்கான வாசல், பாவ்லோ பிரைரேயின் 'ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்கான கல்விமுறை' நூல் வழியாகத்தான்" என்றார், சென்னை சக்திவேல். வாசிப்பு முகாம்களில் பங்குபெறும் ஆசிரியர்கள் தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களோடு ஒப்பிடும்போது ஒப்பீட்டளவில் மிக மிகக் குறைவுதான். ஆனால் பங்குபெறும் ஆசிரியர்களின் வகுப்பறையில் அது நிகழ்த்தியிருக்கும் தாக்கம் அதிகம். மாணவர்களிடத்தில் மேலும் மேலும் நெருங்கிச் செல்ல அது ஏற்படுத்தும் உந்துதல் மிக மிக அதிகம்.


இம்முகாமில் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ”நினைவுகள் அழிவதில்லை” நாவலின் வாசிப்பு அன்று இரவு உணவுக்குப் பின் துவங்கியது. பொதுவாக வாசிப்பு முகாம்களில் இடம்பெற்ற குழு வாசிப்பு முறை தவிர்க்கப்பட்டு, இந்நாவலை ரசித்து, ருசித்து, இதயம் முழுவதும் உள்வாங்க வேண்டும். அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்புவின் செயல்பாடுகள், சம்பாஷனைகள், அர்பணிப்பு அதனை நாவல் என்னும் படைப்பிலக்கியம் வழியாக எடுத்துச் செல்லும் விதம், தூக்குக் கயிற்றை முத்தமிடும் இவர்களது நெஞ்சுரம், விவசாயிகள் போராட்ட வாழ்க்கை இவற்றை வாசிக்கும்போது எவ்வளவுதான் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் மாலை, மாலையாக கோர்த்து வரும் வாசகனின் கண்ணீர் ஆகியவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக, இம்முறை தனி வாசிப்புக்கு விடப்பட்டது. 


நூல் வாசிப்பின் ஊடாக, நாவலின் கருப்பொருள் சார்ந்த கருத்துரை ஒன்றை பேராசிரியர் மாடசாமி நிகழ்த்தினார். அவரது உரை கையூர் விவசாயிகளின் போராட்டத்தில் இருந்து துவங்காமல், தமிழக விவசாயிகள் போராட்டம், தூக்கிட்டும், நஞ்சிட்டும், சுடப்பட்டும் செத்து மடிந்த விவசாயிகளின் வீர வரலாறோடு துவங்கியது. நாவலில் வரும் மாஸ்டரின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் நிரம்பியிருக்கும் பாடம் பற்றிப் பேசினார். தான் ஆசிரியர் சங்க முன்னணி செயல்பாட்டாளனாக இருந்த போது, இந்த நாவல் வாசிப்பின் வழி தன்னுள் கலந்த மாஸ்டர் தனக்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் என்ன? என்பதைக் கூறி நீங்கள் அவரிடம் இருந்து என்ன பாடம் கற்றுக் கொள்ளப்போகிறீர்கள் எனக் கேட்டார். வகுப்பறை ஜனநாயகம், வகுப்பறை நிர்வாகம், இயல்பான கற்றல் ஆகியவற்றை இத்துடன் இணைத்தார். நமது வகுப்பறைச் செயல்பாடு, வகுப்பறையின் ஏற்றத்தாழ்வையும் சமூக ஏற்றத்தாழ்வையும் குறைத்து சமூக மாற்றம் என்னும் பல்சக்கரத்தில் ஒரு கண்ணியையாவது நகர்த்த வேண்டும் என்றார். இவரது பேச்சை கருத்துரை என்றோ உரைவீச்சு என்றோ கூறுவது பொருத்தப்பாடானது அல்ல. அவரது பகிர்வு, ஆரோக்கியமான கலந்துரையாடலாக இருந்தது.


இரண்டாம் நாள் மாலை 6 மணிக்கு நினைவுகள் அழிவதில்லை நாவலின் மீதான விவாதம் தொடங்கியது. நாற்பதுகளில் பள்ளி படிப்பு வாய்த்திராத கிராமப்புற விவசாயிகளிடம் கருக்கொண்ட நிலப்பிரபத்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, அதை சங்கமாக ஒன்று திரண்டு வெளிப்படுத்திய விதம் தற்காலத்தில் கூட அரிதாக உள்ளதே என்பதில் தொடங்கி நாவலின் மையப் பொருளைச்சுற்றி பல்வேறு சமகால பிரச்சனைகளும் இணைத்து விவாதிக்கப்பட்டது. இதனைத் பிரின்ஸ் கஜேந்திர பாபு, மிக நேர்த்தியாக தொகுத்தளித்தார். அப்பு, சிருகண்டன், அபுபக்கர், குஞ்ஞம்புவின் தியாகங்கள் போராட்டங்கள் பெயரளவிற்கான ஜனநாயகத்திற்கான போராட்டம் அல்ல சமூக மாற்றத்திற்கான போராட்டம் என விளக்கிக் கூறினார். இந்த நாவல் வாசிப்புக்கு எடுத்துக் கொண்டதன் நோக்கமே, 1940களில் ஒரு ஜமீந்தார் நடத்திய தொடக்கப்பள்ளியில் வேலை செய்த ஆசிரியர் எப்படி அந்த மாணவர்களிடமும் மக்களிடமும் இரண்டறக் கலந்து நின்றார்? மாற்று பொருளாதார கருத்துக்களை வேருன்ற செய்ய முடிந்தது? அப்படியாயின் இன்றைய நிலையில் எனது பணிச் சூழல் சரியில்லை, தலைமை ஆசிரியர் சரியில்லை, AEEO சரியில்லை, மக்கள் சரியில்லை, மாணவர்கள் சரியில்லை எனக் கூறி நமது சமூகப் பொறுப்புகளை எப்படித் தட்டிக் கழிப்பது எந்தவகையில் நியாயம் ஆகும்? நாவலில் வரும் மாஸ்டரைப் போன்ற பணிகளை செய்யாவிட்டாலும், ஒரு ஆசிரியராக மாணவருக்கும் சமூகத்திற்கும் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதை அவரது உரை சிந்திக்கத் தூண்டியது.


சென்னை அறிக்கையின் சிறப்பைப் பறைசாற்றும் மிக முக்கியமான வெளிப்பாடு, டெல்லியில் உள்ள தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள ரோசாலக்ஸ்சம்பர்க் ஆய்வு மையம் இதனை நூலாக வெளியிட்டு இருப்பது, இத்தகைய சிறப்பான அறிக்கையை சென்னையில் கூடிய கல்வி உரிமைக்கான அகில இந்திய மாநாடு வெளியிட்டிருப்பதும், அதனைப் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைந்து நடத்தியதும் பெருமைக்குரிய விசயமே. இந்த அறிக்கையை அறிமுகம் செய்து பேராசிரியர் விஜயகுமார் பேசும்போது, இதன் முக்கியத்துவத்தை உச்சி முகர்ந்தார். இவ்வளவு சிறந்த ஆவணத்தை இதுநாள்வரை படிக்காமல் விட்டது தமது பெரும் தவறு என்று சாட்சியம் அளித்தார். இவ்வறிக்கையை வாசித்துவிட்டு, விவாதித்த ஆசிரியர்கள், தமிழகப் பள்ளிக் கல்வியும் இந்தியக் கல்வி நிலையிலும் உள்ள அபாயகரமான நிலையை உணர்ந்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். பங்கேற்பாளர்கள் எழுப்பிய எல்லாக் கேள்விகளுக்கும் சென்னை அறிக்கையிலேயே பதில் இருந்தது. பொதுத்தேர்தல் முடிந்ததும் முன்வர உள்ள PPP மாதிரிப் பள்ளிகள் எனப்படும் பொது-தனியார் கூட்டுப் பள்ளிகள் என்னும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தும் வழிமுறைகள் என்ன? என ஆதங்கத்துடன் கேள்வி எழுப்பினார். கல்வி உரிமை என்பது அருகாமைப்பள்ளி பொதுப்பள்ளி வாயிலாக மட்டுமே சாத்தியம். இந்த சாத்தியப்பாட்டை நிகழ்த்த ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் அதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம் என்றும் முகாமில் பங்கேற்றவர்கள் உறுதியேற்றனர். 

இந்த அறிக்கையின் மீதான விவாதத்தைத் தொகுத்துப் பேசிய பிரின்ஸ் கஜேந்திர பாபு, சென்னை அறிக்கை உருவாக காரணமாக இருந்த 2010ல் நடந்த அகில இந்திய கல்வி உரிமை மாநாடு, அது உருவான பின்னணியையும் எடுத்துக்கூறினார். அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளிக்கு அகில இந்திய அளவிலும், தமிழக அளவிலும் பாடுபட்டவர்களை பட்டியலிட்டார். கல்வியின் வழி அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவர முதன்முதலில் தேர்தலின் வழியாக கேரளத்தில் அமைந்த ஈ.எம்.எஸ். தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு பலியான கதையையும் பகிர்ந்து கொண்டார். இன்றுள்ள அரசியல் கட்சிகளில் தனது கட்சித் திட்டத்திலேயே அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி இலட்சியத்தை வரித்துக்கொண்டுள்ள ஒரே ஒரு அரசியல் கட்சி CPI(M). கல்வி உரிமையை அடிப்படை உரிமையாக்க அரசியல் சாசனத்தில் அதை இயற்றிய காலத்திலேயே வழிவகை செய்ய முயற்சித்தார் அம்பேத்கர். முயற்சிகளை முறியடித்து, கல்வி உரிமையை மறுதளிக்க அடிப்படைக் காரணமாக இருந்தார் மோடி தன் முன்மாதிரியாகக் கொள்ளும் வல்லபாய் பட்டேல். தனது முயற்சியை கைவிடாத அம்பேத்கார், வழிகாட்டும் நெறிமுறையிலேனும் கல்வி உரிமையை இணைத்து, அரசியல் சாசனத்தில் கல்வி உரிமை முச்சுவிட காரணமாக இருந்தார். கல்வி உரிமைச் சட்டத்தை நடைமுறை சாத்தியமற்ற, நவீன தாராளமயத்தின் வழி நின்று உருவாகியுள்ள விதம் ஆகியன பற்றி பட்டியலிட்டார். தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி வர வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர் சங்கம் ஆற்றிய பங்கு, அதன் அன்றைய தலைவர்கள் பட்ட அடி, சிந்திய இரத்தம் மூலமாகவே சமச்சீர் கல்வி என்ற பேச்சே தமிழ்நாட்டில் எழுந்தது என்றார். இவ்வாறு பாடுபட்டு முன்னுக்கு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வி என்பது சமச்சீர் கல்வியாக இல்லாமல் நீர்த்துப்போய் சமச்சீர் பாடத்திட்டமாய் சுருங்கிப்போன சோகம். உண்மையான சமச்சீர் கல்வி என்பது அருகாமைப்பள்ளி, பொதுப்பள்ளி தான். இதனை அரசு தனது பொது நிதியில் உருவாக்கி பராமரிக்க வேண்டும். அதற்காக சென்னை அறிக்கையில் உள்ள வழிமுறைகளை நடைமுறைப்படுத்த பாடுபட வேண்டும் என்று கோரி முடித்தார். 




மூன்றாம் நாள் மூன்று மணிக்கு முகாமை முடிக்க வேண்டும் என்பது முடிவு. மாலை 5.30மணி கடந்தும் ஒருவரும் அசையாமல் முழுமையாய் பங்கேற்றனர். 24 மாவட்டங்களில் இருந்து 120 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர். இந்த வாசிப்பு முகாம்களின் தனிச்சிறப்பு, ஒரு முகாமுக்கு வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்படும் நூல்கள், முகாமிற்கான செலவு என எல்லாச் செலவுகளையும் பங்கேற்பு அடிப்படையில் பகிர்ந்து கொள்வது. அவ்வாறே இந்த முகாமிலும் தலைக்கு 430/- ரூபாய் செலவானது. ஒவ்வொரு முகாமும் அதற்க்கு முந்தைய முகாமைக் காட்டிலும் எழுச்சியையும் வீச்சையும் தந்து வருகிறது. அதேபோல, இந்த முகாமும் கடந்த முகாம்களைக் காட்டிலும் 25 பேர்களின் கூடுதல் பங்கேற்போடும், பள்ளிக்கல்வி அவலம் தீர ஏதேனும் செய்தே ஆகவேண்டும் என்ற அர்பணிப்பு உணர்வையும் தந்தது. முகாமில் நிறைவுரையாற்றிய பேரா.R.மனோகரன் வாசிப்பின் முக்கியத்துவம் பற்றியும், ஆசிரியர் சங்கத்தோடு இணைத்து மேலும் மேலும் மெருகேற்ற வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார். 10வது வாசிப்பு முகாம் மேலும் ஒரு படி முன்னேறி, ஒவ்வொரு முகாமுக்கும் இடையில் உள்ள நான்கு மாத இடைவெளியிலான காலத்திற்கு ஒரு செயல் திட்டத்தை உருவாக்கியது. அதன்படி அடுத்த முகாம் நடைபெற உள்ள திண்டுக்கல் நகரின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக இருக்கும் தோல் தொழிலை மையப்படுத்தி எழுதப்பட்ட 'தோல்' நாவலை வாசித்துவிட்டு, அதன் மீதான எழுத்துப் பூர்வமான மதிப்புரை ஒன்றை ஒவ்வொருவரும் கொண்டுவர வேண்டும். அவ்வாறு மதிப்புரை எழுதிவரும் நபர்களை மட்டுமே விவாதத்தில் பங்குபெற அனுமதிப்பது, மீதமுள்ள பங்கேற்பாளர்கள் பார்வையாளர்களாக மட்டுமே அந்த அமர்வில் இருப்பது என முடிவு செய்தது.


அடுத்த முகாமில் வாசிப்புக்கும் விவாதத்திற்குமான நூல்களாக பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள ”ஒவ்வொரு குழந்தையையும் நேசிப்போம்”, ”இவர்களுக்கு ஏன் இல்லை கல்வி? ” மற்றும் அறிவியல் வெளியீடுகள் வெளியிட்டுள்ள ”வாழ்வே அறிவியல்” ஆகிய நூல்கள்எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.


செப்டம்பர் 27, 28ல் நடக்கவிருக்கும் இம்முகாமுக்கு இப்போதே குறுஞ்செய்திகள் பறக்கத் தொடங்கிவிட்டன. குழு மின் அஞ்சல்களில் செய்தி ஊடாட்டம் தொடங்கிவிட்டது. தமிழக பள்ளிக்கல்வியிலும் வகுப்பறையிலும் வியத்தகு மாற்றத்தை நிகழ்த்த இருக்கும் வாசிப்பு முகாமில் நீங்களும் பங்குபெற விருப்பமா அழையுங்களேன் -9488011128,8903161283. 


தொகுப்பு:க.காந்திமதி, ஈரோடு

Tuesday 13 May 2014

அரசு பள்ளிகளில் முன்பருவ கல்வியை தொடங்க வேண்டும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மே 10, 11ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பேரா.என்.மணி, பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களை இதுவரை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை.மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்து குழந்தைகளுக்கும் அரசே தனது சொந்தப் பொறுப்பில், செலவில் அருகமைப் பொதுப்பள்ளி முறையில் வழங்க முன்வரவேண்டும்.அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள 25 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

அதே நேரத்தில் 25 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களாகச் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தங்களுடைய சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்களே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும்.மேலும், உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச்சட்டம் சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பு வழங்கியிருப்பதை சிறுபான்மை இனத்தவரில் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரானதாகவே பார்க்கவேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும்.

தனியார் பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம்

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான முதல்படியாக பொதுப்பாடத்திட்ட முறை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் எனும்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும். மாறாக மழலையர் கல்வி முதலாகவே கட்டணம் என்ற பெயரில் லட்சக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

அரசு உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும்.பள்ளிகளுக்கிடையே வேறுபாடுகள் இல்லையெனும்போது பதின்மநிலைப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன் பள்ளிகள்) என்று அழைக்கப்படவேண்டிய அவசியமில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளும் மழலையர், துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்றே அழைக்கப்படவேண்டும். ஆதலால் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும்.

கல்வி உத்தரவாதம்

பள்ளிக்கல்வி என்பது முன்பருவக் கல்வியோடு இரண்டறக் கலந்தது. இதுவரையிலும் முன்பருவக் கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்காததன் விளைவாகவே தனியார் நர்சரி பள்ளிகளை நோக்கி தள்ளப்பட்டு தனியாருடைய லாபவேட்டைக்கு மக்கள் இரையாகிறார்கள்.எனவே தமிழக அரசு முன்பருவக் கல்வியை (டுமுழு, ருமுழு) வருகின்ற கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை கல்வித்துறையுடன் இணைத்து அனைத்து ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

தாய்மொழிவழிக் கல்வி

கர்நாடகா மாநிலத்திலுள்ள சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளின் பயிற்றுமொழியை அரசு தீர்மானிக்க முடியாது அல்லது தீர்மானிக்கும் உரிமையில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.குழந்தையின் தாய்மொழியே சிந்தனை மொழி ஆகவும் வீட்டு உபயோக மொழியாகவும் வட்டார மொழியாகவும் இருப்பதால் இதுவே உண்மையான கற்றல் நடைபெறவும் படைப்பாற்றலை வளர்க்கவும் மேம்படுத்தவும் ஏதுவான மொழியாக இருக்குமென்பது உலக அளவிலான கல்வியாளர்களின் கருத்தும் அனுபவமும் ஆகும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதற்கு முரணாக அமைந்திருப்பது மிகவும் வருந்தத் தக்கது. பள்ளிக்கல்வி தாய்மொழியில் இருப்பது குழந்தை உரிமை மீறலாகாது. மாறாக இயல்பான கற்றலுக்கு அதுவே வழிவகுக்கும்.எனவே இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் திருத்தி எழுதவும் மத்திய, மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

கலைப் பயணம் 
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும் மாநிலம் தழுவிய கல்வி விழிப்புணர்வுக் கலைப்பயணம் ஒன்றை வரும் ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்) முதல் செப்டம்பர்-5 (ஆசிரியர் தினம்) வரை நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளது.இந்தக் கலைப்பயணத்தின் வாயிலாக சமச்சீர் பாடத்திட்டம் என்பதைத் தாண்டி உண்மையான சமச்சீர் கல்வியாக அமல்படுத்துதுதல், செயல்வழிக்கற்றலை, கற்றலை மேம்படுத்தத்தக்கதாக மாற்றி அமைத்தல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு உத்தியை பொருள் உள்ளதாக மாற்றுதல், பிபிபி கல்வி நிலையங்கள் அமைக்கும் கொள்கையைத் திரும்பப் பெறக்கோருதல், தனியார் பள்ளிகளை கட்டுப்படுத்துதல், கல்வி வணிகமயமாவதைத் தடுத்தல், தாய்மொழிவழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அருகாமைப்பள்ளி அம்சத்துடன் கூடிய பொதுப்பள்ளிகள் என்பது முற்றிலும் அரசு நிதியிலேயே சாத்தியமாகும். அதன் வழியே தரமான, சமமான கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாடகங்கள், பாடல்களை உள்ளடக்கியதாக இந்தக் கலைப்பயணம் அமையும். இந்தக் கலைப்பயணத்தை மேற்படி கோரிக்கைகளுக்கு ஆதரவான அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு நடத்துவது எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

நன்றி: தீக்கதிர், மே,13

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

First Published : 12 May 2014 12:16 PM IST
தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மே 10, 11 தேதிகளில் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் பேரா.என்.மணி, பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் அனைத்து மாவட்டச்செயலாளர்களும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கல்வி குறித்த பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் 1 : கல்வி உரிமைச் சட்டம் 25% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துக...
குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களை இதுவரை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை.
மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்து குழந்தைகளுக்கும் அரசே தனது சொந்தப் பொறுப்பில், செலவில் அருகமைப் பொதுப்பள்ளி முறையில் வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது
அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள 25% இடஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் 25% இட ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களாகச் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தங்களுடைய சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்களே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.
மேலும் உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச்சட்டம் சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது எனத்  தீர்ப்பு வழங்கியிருப்பதை சிறுபான்மை இனத்தவரில் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரானதாகவே பார்க்கவேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 2 : அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்திடுக..
தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான முதல்படியாக பொதுப்பாடத்திட்ட முறை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் எனும்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும். மாறாக மழலையர் கல்வி முதலாகவே கட்டணம் என்ற பெயரில் இலட்சக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அரசு உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும் எனவும்
பள்ளிகளுக்கிடையே வேறுபாடுகள் இல்லையெனும்போது பதின்மநிலைப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன் பள்ளிகள்) என்று அழைக்கப்படவேண்டிய அவசியமில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளும் மழலையர், துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்றே அழைக்கப்படவேண்டும். ஆதலால் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3 : அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வியை உத்தரவாதப்படுத்துக...
பள்ளிக்கல்வி என்பது முன்பருவக் கல்வியோடு இரண்டறக் கலந்தது. இதுவரையிலும் முன்பருவக் கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்காததன் விளைவாகவே தனியார் நர்சரி பள்ளிகளை நோக்கி தள்ளப்பட்டு தனியாருடைய இலாபவேட்டைக்கு மக்கள் இரையாகிறார்கள்..
எனவே தமிழக அரசு முன்பருவக் கல்வியை (LKG, UKG) வருகின்ற கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை கல்வித்துறையுடன் இணைத்து அனைத்து ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 4 : தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்துக...
கர்நாடகா மாநிலத்திலுள்ள சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளின் பயிற்றுமொழியை அரசு தீர்மானிக்க முடியாது அல்லது தீர்மானிக்கும் உரிமையில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
குழந்தையின் தாய்மொழியே சிந்தனை மொழி ஆகவும் வீட்டு உபயோக மொழியாகவும் வட்டார மொழியாகவும் இருப்பதால் இதுவே உண்மையான கற்றல் நடைபெறவும் படைப்பாற்றலை வளர்க்கவும் மேம்படுத்தவும் ஏதுவான மொழியாக இருக்குமென்பது உலக அளவிலான கல்வியாளர்களின் கருத்தும் அனுபவமும் ஆகும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதற்கு முரணாக அமைந்திருப்பது மிகவும் வருந்தத் தக்கது. பள்ளிக்கல்வி தாய்மொழியில் இருப்பது குழந்தை உரிமை மீறலாகாது. மாறாக இயல்பான கற்றலுக்கு அதுவே வழிவகுக்கும்.
எனவே இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் திருத்தி எழுதவும் மத்திய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது..
தீர்மானம் 5 : கல்வி தனியார்மயமாவதைத் தடுத்திடவும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் மாநிலந்தழுவிய அளவில் அறிவியல் இயக்கக் கலைப்பபயணம்...
தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும் மாநிலம் தழுவிய கல்வி விழிப்புணர்வுக் கலைப்பயணம் ஒன்றை வரும் ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்) முதல் செப்டம்பர்-5 (ஆசிரியர் தினம்) வரை நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளது.
இந்தக் கலைப்பயணத்தின் வாயிலாக சமச்சீர் பாடத்திட்டம் என்பதைத் தாண்டி உண்மையான சமச்சீர் கல்வியாக அமல்படுத்துதுதல், செயல்வழிக்கற்றலை, கற்றலை மேம்படுத்தத் தக்கதாக மாற்றி அமைத்தல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு உத்தியை பொருள் உள்ளதாக மாற்றுதல், PPP கல்வி நிலையங்கள் அமைக்கும் கொள்கையைத் திரும்பப் பெறக்கோருதல், தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துதல், கல்வி வணிகமயமாவதைத் தடுத்தல், தாய்மொழிவழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அருகாமைப்பள்ளி அம்சத்துடன் கூடிய பொதுப்பள்ளிகள் என்பது முற்றிலும் அரசு நிதியிலேயே சாத்தியமாகும்.
அதன் வழியே தரமான, சமமான கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாடகங்கள், பாடல்களை உள்ளடக்கியதாக இந்தக் கலைப்பயணம் அமையும். இந்தக் கலைப்பயணத்தை மேற்படி கோரிக்கைகளுக்கு ஆதரவான அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு நடத்துவது எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
நன்றி: தினமணி

கல்வி உரிமைச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துக : தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயற்குழுவில் தீர்மானம்

வணக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கூட்டம் மே 10, 11 தேதிகளில் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் நடைபெற்றது. மாநிலத்தலைவர் பேரா.என்.மணி, பொதுச்செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன்நாதன், மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், மாநிலக் கல்வி ஒருங்கிணைப்பாளர் தே.சுந்தர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளும் அனைத்து மாவட்டச்செயலாளர்களும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கல்வி குறித்த பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தீர்மானம் 1 : கல்வி உரிமைச் சட்டம் 25% இட ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்துக...

குழந்தைகளுக்கான இலவச, கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு நான்கு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள பல முக்கிய அம்சங்களை இதுவரை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றவில்லை.

மழலையர் கல்வி முதல் மேல்நிலைக்கல்வி வரை அனைத்து குழந்தைகளுக்கும் அரசே தனது சொந்தப் பொறுப்பில், செலவில் அருகமைப் பொதுப்பள்ளி முறையில் வழங்க முன்வரவேண்டும் என தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது

அதுவரையில் தற்காலிக ஏற்பாடாக கல்வி உரிமைச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள 25% இடஒதுக்கீட்டை முழுமையாக அனைத்து தனியார் பள்ளிகளிலும் நடைமுறைப்படுத்துவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் 25% இட ஒதுக்கீட்டுக்கான கட்டணத்தை இலாபமீட்டக்கூடிய நிறுவனங்களாகச் செயல்படக்கூடிய தனியார் பள்ளிகள் தங்களுடைய சமூகப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்களே ஏற்றுக்கொள்ள முன்வரவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது.

மேலும் உச்சநீதிமன்றம் கல்வி உரிமைச்சட்டம் சிறுபான்மை நிறுவனங்களுக்கு பொருந்தாது எனத் தீர்ப்பு வழங்கியிருப்பதை சிறுபான்மை இனத்தவரில் நலிவடைந்த பிரிவினருக்கு எதிரானதாகவே பார்க்கவேண்டியுள்ளது. எனவே மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மேல்முறையீடு செய்வது குறித்து மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 2 : அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே கட்டணத்தை நிர்ணயித்திடுக..

தமிழகத்தில் சமச்சீர் கல்விக்கான முதல்படியாக பொதுப்பாடத்திட்ட முறை கடந்த 2009ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கிறது. அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் எனும்போது தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஒரே கட்டணம்தான் வசூலிக்கப்படவேண்டும். மாறாக மழலையர் கல்வி முதலாகவே கட்டணம் என்ற பெயரில் இலட்சக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்ற அவலம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அரசு உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் எனவும் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் எனவும் ஒரே மாதிரியான கட்டணத்தை நிர்ணயித்திட வேண்டும் எனவும் 

பள்ளிகளுக்கிடையே வேறுபாடுகள் இல்லையெனும்போது பதின்மநிலைப் பள்ளிகள் (மெட்ரிக்குலேசன் பள்ளிகள்) என்று அழைக்கப்படவேண்டிய அவசியமில்லை. எனவே அனைத்துப் பள்ளிகளும் மழலையர், துவக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என்றே அழைக்கப்படவேண்டும். ஆதலால் அதற்கான அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 : அனைத்துக் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வியை உத்தரவாதப்படுத்துக...

பள்ளிக்கல்வி என்பது முன்பருவக் கல்வியோடு இரண்டறக் கலந்தது. இதுவரையிலும் முன்பருவக் கல்வியை அரசுப் பள்ளிகளில் துவங்காததன் விளைவாகவே தனியார் நர்சரி பள்ளிகளை நோக்கி தள்ளப்பட்டு தனியாருடைய இலாபவேட்டைக்கு மக்கள் இரையாகிறார்கள்..

எனவே தமிழக அரசு முன்பருவக் கல்வியை (LKG, UKG) வருகின்ற கல்வியாண்டில் அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்கவேண்டும் எனவும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை கல்வித்துறையுடன் இணைத்து அனைத்து ஏழை எளிய மக்களின் குழந்தைகளுக்கும் முன்பருவக் கல்வி கிடைப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறது. 

தீர்மானம் 4 : தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்துக...

கர்நாடகா மாநிலத்திலுள்ள சிறுபான்மைக் கல்வி நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் குழந்தைகளின் பயிற்றுமொழியை அரசு தீர்மானிக்க முடியாது அல்லது தீர்மானிக்கும் உரிமையில் தலையிட முடியாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் தாய்மொழியே சிந்தனை மொழி ஆகவும் வீட்டு உபயோக மொழியாகவும் வட்டார மொழியாகவும் இருப்பதால் இதுவே உண்மையான கற்றல் நடைபெறவும் படைப்பாற்றலை வளர்க்கவும் மேம்படுத்தவும் ஏதுவான மொழியாக இருக்குமென்பது உலக அளவிலான கல்வியாளர்களின் கருத்தும் அனுபவமும் ஆகும். ஆனால் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அதற்கு முரணாக அமைந்திருப்பது மிகவும் வருந்தத் தக்கது. பள்ளிக்கல்வி தாய்மொழியில் இருப்பது குழந்தை உரிமை மீறலாகாது. மாறாக இயல்பான கற்றலுக்கு அதுவே வழிவகுக்கும்.

எனவே இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் திருத்தி எழுதவும் மத்திய மாநில அரசுகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். தாய்மொழிவழிக் கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு கேட்டுக்கொள்கிறது..

தீர்மானம் 5 : கல்வி தனியார்மயமாவதைத் தடுத்திடவும் அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்திடவும் மாநிலந்தழுவிய அளவில் அறிவியல் இயக்கக் கலைப்பபயணம்...

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் தரத்தினை மேம்படுத்தவும் மாநிலம் தழுவிய கல்வி விழிப்புணர்வுக் கலைப்பயணம் ஒன்றை வரும் ஆகஸ்ட்-15 (சுதந்திர தினம்) முதல் செப்டம்பர்-5 (ஆசிரியர் தினம்) வரை நடத்துவதென தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் கலைப்பயணத்தின் வாயிலாக சமச்சீர் பாடத்திட்டம் என்பதைத் தாண்டி உண்மையான சமச்சீர் கல்வியாக அமல்படுத்துதுதல், செயல்வழிக்கற்றலை, கற்றலை மேம்படுத்தத் தக்கதாக மாற்றி அமைத்தல், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு உத்தியை பொருள் உள்ளதாக மாற்றுதல், PPP கல்வி நிலையங்கள் அமைக்கும் கொள்கையைத் திரும்பப் பெறக்கோருதல், தனியார் பள்ளிகளைக் கட்டுப்படுத்துதல், கல்வி வணிகமயமாவதைத் தடுத்தல், தாய்மொழிவழிக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட அருகாமைப்பள்ளி அம்சத்துடன் கூடிய பொதுப்பள்ளிகள் என்பது முற்றிலும் அரசு நிதியிலேயே சாத்தியமாகும். அதன் வழியே தரமான, சமமான கல்வி பெறும் உரிமை அனைவருக்கும் சாத்தியமாகும் என்பதை வலியுறுத்தும் விதமாக நாடகங்கள், பாடல்களை உள்ளடக்கியதாக இந்தக் கலைப்பயணம் அமையும். இந்தக் கலைப்பயணத்தை மேற்படி கோரிக்கைகளுக்கு ஆதரவான அனைத்து தரப்பினரையும் இணைத்துக்கொண்டு நடத்துவது எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயற்குழு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

Thursday 8 May 2014

கானல் நீராகிப்போன கட்டாய இலவசக் கல்வி


கட்டாய இலவசக் கல்வி சட்டத்தின் கீழ் நிரப்ப வேண்டிய 25% இடங்களுக்கான மனு கொடுக்க வேண்டிய தேதியை நீட்டி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே பல தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளிலுள்ள மழலையர் மற்றும் ஒன்றாம் வகுப்புக்கான இடங்களை நிரப்பிவிட்டன.

அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதற்கு அனுமதி மனு வாங்குவதற்காகப் பெற்றோர்கள் இரவு முழுதும் நடைபாதையில் தங்கியதை நாளிதழ்கள் புகைப்படமெடுத்து வெளியிட்டன. மழலையர் வகுப்புகளுக்கான கல்விக் கட்டணங்களைக் கேட்டால் மயக்கம் வந்துவிடும். ஐம்பதாயிரத்தில் தொடங்கி இரண்டு லட்சம் வரை எல்.கே.ஜி. வகுப்பில் சேரக் கல்விக் கட்டணங்கள் வாங்குகின்றனர். அரசு மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில்கூட அத்தகைய கட்டணங்கள் வாங்கப்படுவதில்லை.

உண்மையிலேயே சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பின்னடைவுற்ற வகுப்புகளிலிருந்து வரும் மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உள்ள இடஒதுக்கீடு கடந்த இரண்டாண்டுகளாக நிரப்பப்பட்டுவருகின்றனவா என்ற கேள்விக்கான பதில் ஏமாற்றத்தையே அளிக்கும். 2009-ல் குழந்தைகளுக்கான கட்டாய இலவசக் கல்வி உரிமை வழங்கும் சட்டத்தை இயற்றியது தங்களது சாதனையென்று காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் பிரச்சாரத்தைச் செய்திருந்தாலும், அதைக் காதில் வாங்குவோர் எவருமில்லை.

‘ஒடுக்கப்பட்டவர்களின் விடுதலைக்கான கல்வி எது?’ என்று பாவ்லோ ஃப்ரையிரே என்ற பிரேசில் நாட்டு அறிஞர் எழுதியுள்ள புத்தகத்தில் சம்பிரதாயமான கல்வியைப் பற்றி இவ்வாறு கூறியுள்ளார்:-

“கல்வி என்பது வங்கியில் பொருளைப் போட்டு வைப்பது போன்ற ஒரு வேலையாகிறது. தகவல்களைத் தெரிவிப்பவராக, பகிர்ந்துகொள்பவராக இல்லாமல் அதிகாரபூர்வ அறிவிப்புகளை/தகவல்களை வெளியிடு

பவராக ஆசிரியர் இருப்பதைக் காண்கிறோம். அதிகாரபூர்வ தகவல் பகுதிகளைச் சேமித்துப் போட்டு வைக்கப்படும் வங்கியாக மாணவர்கள் இருப்பதால் அதை அவர்கள் ஏற்றுப் பொறுமையாகத் திரும்பவும் சொல்லி, மனப்பாடம் செய்து வைத்துக்கொள்ள வேண்டியதாகிறது. அவர்கள் சேமிப்பாளர்களாகவோ, தாங்கள் உட்பதிவு செய்த விவரங்களின் பட்டியலாளர்களாகவோ இருப்பதே உண்மை… ஆனால், ஆய்ந்தறியும்போதோ மனிதர்களைச் சுயசிந்தனை அற்றவர்களாக, படைப்பாற்றல் அற்ற ஜந்துக்களாக இந்தத் தவறான கல்வி முறை ஆக்கிவிடுவதைக் காண்கிறோம்”

அப்படிப்பட்ட சம்பிரதாயக் கல்வி முறைகூட இந்தியாவில் பெரும்பான்மையான சாதியினருக்குப் பல நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்டே வந்துள்ளது. எல்லா அறிவும் வேதங்களில் உள்ளது என்று கூறிய மனுதர்மமும், அவ்வேதங்களைக் கற்கும் உரிமையை அனைவருக்கும் அளிக்கவில்லை. சாதிக் கட்டுமானத்தை மீறிக் கற்க முயன்ற ஏகலைவனுக்கும் சம்பூகனுக்கும் ஏற்பட்ட கதியை நாமறிவோம்.

காலனி ஆட்சி முறை வந்த பின்னர்தான் சம்பிரதாயக் கல்விக்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. ராணுவக் குடியிருப்புகளிலும், சுவிசேஷப் பிரச்சாரம் செய்ய வந்த கிறித்துவ குருமார்கள் பள்ளிகள் சிலவற்றை நிறுவிப் பாகுபாடின்றி அனைத்து சமுதாயத்தினரும் கல்வி கற்கும் வாய்ப்பை ஏற்படுத்தினர். அச்சிறிய நடவடிக்கையைகூடப் பாராட்டி, வேல்ஸ் இளவரசருக்கு நல்வரவு அளிக்கும் தனது கவிதையில் பாரதி இவ்வாறு பதிவு செய்தார் :-

“மேற்றிசை இருளினை வெருட்டிய ஞான

ஒண்பெருங் கதிரின் ஓரிரு கிரணம் என்

பாலரின் மீது படுதலுற்றனவே.”

சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான கோபால கிருஷ்ண கோகலேதான் முதன்முறையாக 1909-ம் வருடம் இந்தியக் குழந்தைகள் அனைவருக்கும் பாகுபாடற்ற கட்டாய இலவசக் கல்வி வழங்கக்கோரிக் குரலெழுப்பினார். 1933-ல் மகாத்மா காந்தி வார்தாவில் கூட்டிய கல்வி மாநாட்டில் குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி வலியுறுத்தப்பட்டது.

சுதந்திர இந்தியா என்ன செய்தது?

வசதி படைத்த செல்வந்தர்கள் சிலரும் கிராமப்புறங்களில் சில நிலச்சுவான்தார்களும் ஆரம்பக் கல்விக் கூடங்களை கிராமங்களில் அமைத்தனர். ஆனால், அவர்களின் நோக்கமோ வேறு. கன்னட நாவலாசிரியர் நிரஞ்சனா 1955-ல் எழுதிய ‘சிரஸ்மரணா’ என்ற நாவல், தமிழில் ‘நினைவுகள் அழிவதில்லை’ என்று மொழிபெயர்க்கப்பட்டது. அந்நாவலில், கிராமத்தில் பள்ளி ஏற்படுத்திய நிலச்சுவான்தாரரைப் பற்றி மற்ற ஆதிக்கப் பிரிவினர் விமர்சனம் செய்தபோது, அவர் இவ்வாறு தன்னிலை விளக்கம் அளிக்கிறார்:-

“பள்ளிக்கூடம் ஏற்படுத்துவதில் நான்தான் காரணமாக இருந்த போதிலும், விவசாயிகளின் பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டும் விஷயத்தில் எனக்குத் தனியான கருத்து இருக்கிறது. இவர்கள் யாரும் கல்லூரிக்குப் போக வேண்டியதில்லை. விவசாயிகளின் பிள்ளைகள் கையெழுத்துப் போடக் கற்றுக்கொண்டால் போதும்.

இந்த அளவுக்குக் கல்வி எதற்கென்று தெரியுமா? வெறும் கைநாட்டு வைப்பவராக இருந்தால், ஒன்றும் தெரியாதவர்களை ஏமாற்றுவதாக இவர்கள் கூச்சல் போடுவார்கள். இனிமேல் அப்படியல்ல. ஒப்பந்தங்கள் செய்யும்போது எழுதிய அனைத்தையும் புரிந்துகொண்டதாகக் கூறி இவர்கள் எழுத்திலேயே கையொப்பமிடுவாரகள். என்ன சொல்றீங்க?” (பக்கம் : 85)

சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தில் அனைவருக்கும் கட்டாய இலவச ஆரம்பக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்படவில்லை. பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் 2002-ம் ஆண்டு அரசமைப்புச் சட்ட 86-வது திருத்தத்தின்படி 21-A என்ற ஷரத்து நுழைக்கப்பட்டு, 14 வயது வரை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வி என்பது அடிப்படை உரிமையாக்கப்பட்டது.

அதற்குரிய சட்டமோ 2009-ம் வருடம்தான் இயற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி அனைத்து தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும் 25% சமூக, பொருளாதாரரீதியில் பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்க வேண்டுமென்றும் அதற்குரிய கட்டணத் தொகையைச் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளே வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 6 முதல் 14 வயதுக்குரிய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்களைத் தண்டிக்கவும் சட்டம் வழிவகுத்தது.

அச்சட்டத்தை எதிர்த்துத் தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மூன்று வருடங்களுக்குப் பின்னர் 12.4.2012-ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. இலவசக் கல்வி சட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமல்ல என்று தீர்ப்பளிக்கப்பட்டாலும், அச்சட்டம் அனைத்து உதவி பெறும் மற்றும் சுயநிதி சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது.

தமிழகத்தில் சிறுபான்மையினர் நிர்வாகத்தில்தான் மிகப் பெரும் கல்விக்கூடங்கள் நடத்தப்படுகின்றன என்பதால், இச்சட்டம் பிறப்பிலேயே ஊனமுற்றுவிட்டது. 2012-13 முதல் அமலுக்கு வந்த அச்சட்டம், மழலையர் மற்றும் ஒன்றாம் பிரிவில் புதிதாகச் சேர்க்கப்படும் மாணவர் சேர்க்கைக்கு மட்டுமே பொருந்தும்.

சட்டத்தின் ஓட்டைகள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 65 வருடங்கள் கழித்துக் கட்டாய இலவசக் கல்விச் சட்டம் வந்த பின்னரும், அதில் பல குறைபாடுகள் உள்ளன. அக்கம்பக்கம் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவிலுள்ள பள்ளிகளில் மாணவர்கள் சேரும் உரிமை வழங்கினாலும், அந்தச் சுற்றளவிலுள்ள எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டுமென்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

மேலும், இடம் கிடைக்காத மாணவர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களிடம் முறையிட வேண்டுமென்று கூறினாலும், தமிழகம் போன்ற மாநிலங்களில் கல்விக்கூடங்களின் கட்டுப்பாடு கல்வித் துறையினரிடம் மட்டுமே உள்ளது. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அதிகார சுதந்திரத்தில் நகராட்சித் தந்தைகள் வேண்டியவர்களின் குழந்தைகளுக்குத் தரமான பள்ளிக்கூடங்களில் அனுமதி வழங்க சிபாரிசுக் கடிதங்கள் கொடுப்பதிலேயே தங்கள் கடமையைக் கழித்துவிடுகின்றனர்.

பள்ளிச் சேர்க்கையில் குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுகுறித்துப் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி இவ்வாறு கருத்து தெரிவித்தார் :-

“நீதிபதி எழுப்பியுள்ள கேள்விகளுக்கெல்லாம் இந்தச் சட்டத்தில் சரியான விளக்கம் இல்லை. உதாரணமாக, பக்கத்தில் உள்ள பள்ளிக்கூடங்களில் 25% இட ஒதுக்கீடு என்றால், எந்தப் பகுதியைப் பக்கத்தில் உள்ள பகுதி என்று நிர்ணயிப்பது? பெற்றோர் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க முற்படும்போது, தங்களுக்கு விருப்பப்பட்ட பள்ளிக் கூடத்தையும் தேர்ந்தெடுக்க முடியுமா? இது பற்றிய புகாரை, பெற்றோர் கொடுக்க வேண்டுமென்றால் யாரிடம் கொடுப்பது? இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை யார் கண்காணிப்பது?

பள்ளிக்கூடங்களே மாணவர்களைத் தேர்ந்தெடுக்க முடியுமா, அப்படியென்றால், அதற்கு எந்த முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்? ஒருவேளை, அந்தப் பள்ளிக் கூடத்தில் எல்.கே.ஜி. வகுப்பு இருந்தால், அதில் இந்த மாணவர்களைச் சேர்க்க முடியாதா? ஒரு பகுதியில் இரண்டு, மூன்று பள்ளிக்கூடங்கள் இருந்தால், அதில் எந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் இலவசக் கல்வி பெற முடியும்? இலவசக் கல்வி மட்டும் என்றால், அவர்களுக்குச் சீருடை, கல்விச் சுற்றுலா உள்ளிட்ட மற்ற செலவுகள் வழங்கப்படுமா?

மத்திய அரசு இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நல்ல, முறையான விளக்கங்களை அளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததன் நோக்கத்தின் பலன்களை அனைவரும் அடைய முடியும்.” (8.7.2012)

கல்வி அமைச்சர் கபில் சிபலும், பிரதமர் மன்மோகன் சிங்கும் இதற்கெல்லாம் பதில் சொல்லும் நிலைமையில் இல்லை. மத்தியில் புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் அரசு தான் இதுகுறித்துத் தீவிரமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

கட்டாய இலவசக் கல்வி என்பது அரசமைப்புச் சட்டத்தின் கீழ் அடிப்படை உரிமையாக்கப்பட்டிருப்பினும் இன்று தமிழகத் தில் 42% குழந்தைகள் கட்டணம் செலுத்தித் தனியார் பள்ளிகளில்தான் பயின்றுவருகின்றனர் எனும் செய்தி சட்டத்துக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியைப் படம்பிடித்துக்காட்டும். தற்போதைய சட்டத்தின் குறைபாடுகள் நீக்கப்படும்வரை தனியார் சுயநிதிப் பள்ளிகளில் ஏழைகளுக்கு இலவச ஒதுக்கீடு என்பது கானல்நீரே!

- சந்துரு, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி, 
சமூக விமர்சகர்.

நன்றி: தி தமிழ் இந்து

முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.

கல்வியாளர் வசந்தி தேவி, ‘பாடம்’ அமைப்பை சேர்ந்த நாரா யணன், பேராசிரியர் சண்முக வேலாயுதம், ‘பிகமிங் ஐ’ என்ற தனியார் தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த அஷ்வின் ஆகியோர் சனிக்கிழமையன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதா வது:

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் நலிந்த பிரிவி னரை சேர்க்க, மே 18 வரை விண்ணப்பம்அளிக்ககால நீட்டிப்பு செய்யுமாறு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அரசின் பள்ளிக் கல்வித்துறை இதுவரை இதற்கு தேவையான விழிப்புணர்வு அறிவிப்புகளை மேற்கொள்ள வில்லை. இந்தச் சட்டம் தமிழகத் தில் முறையாக பயன்படுத்தப் படவில்லை. கல்வி உரிமைச் சட்டத்துக்கு தமிழகத்தில் விரிவான விதிமுறைகள் இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டங்களை எந்த தனியார் பள்ளியும் முறை யாக பின்பற்றவில்லை. இதில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியி னர், துப்புரவுத் தொழிலாளர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான உள் ஒதுக்கீடு குறித்து உரிய விதிகள் இல்லை.

இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் சேரும் மாணவர் களுக்கு உரிய மதிய உணவு, சீருடை வசதிகள் செய்து தரப்படவில்லை. 25 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களை அரசு மேற்கொள்ள வேண்டும். இலவச கல்வி உரிமைச் சட்டத்தில் மாணவர்களை சேர்த்ததற்கான தவறான புள்ளி விவரங்களை சில பள்ளிகள் தருகின்றன. அரசும் இவற்றை முறையாக ஆய்வு செய்வதில்லை. தவறான தகவல்களைத் தரும் பள்ளிகள் மீது நடவடிக்கையும் எடுப்பதில்லை.

பள்ளிகளின் மொத்த இடங்கள், காலியான இடங்களை தினமும் அறிவிக்கும் ஆன் லைன் மற்றும் ஒற்றைச் சாளரமுறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். சமச்சீர் கல்வி வந்து விட்ட பிறகும் பள்ளிகளின் பெயரில் மெட்ரிக்குலேஷன் என்று சேர்க்கப்படுவது தொடர்கிறது. இதுகுறித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அடிப் படை விதிகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அவற்றை மூட நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளால் தரமான கல்வியைத் தர முடிய வில்லை. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

அட்மிஷன் வேண்டுமா? 

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நலிந்த வகுப்பினர் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெறுவதற்கு உதவி செய்ய ‘பிகமிங் ஐ’ என்ற தன்னார்வ அமைப்பு தயாராக உள்ளது. உதவி தேவைப்படும் பெற்றோர் 89390 88640, 42, 13 மற்றும் 15 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்று மொழி

“உயிர் தமிழுக்கு - உடல் மண்ணுக்கு’’ என்று பேசப்பட்டது. “எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்’’ என்றும் முழக்கம் கேட்டது. அதெல்லாம் இப்போது இல்லை. 
“தமிழ்ப் படிப்பதால், என்ன பயன்?’’- என்று தமிழனே கேட்கிறான். தமிழ் மொழியின் மீது ஒரு, நம்பிக்கை யின்மையை தமிழ் மக்களின் மனதில் ஆழமாக திட்டமிட்டு விதைத்து விட்டார்கள்.

கல்வி என்றால் என்ன? தாய் மொழி என்றால் என்ன? பயிற்று மொழி என்றால் என்ன?- என்பதைப் பற்றி தெளிவற்றவர்களாக தமிழர்கள் பலரும் இருக்கிறார்கள்.இதில் பல கற்றறிந்த கல்வி யாளர்களும், அரசு அலுவலர்களும், அரசியலாளர்களும் அடக்கம்.

குறிப்பாக பாடமொழிக்கும் பயிற்று மொழிக்கும் உள்ள வேறுபாட்டை பலர் புரிந்து கொள்வதில்லை. தமிழ் மொழியை ஒரு பாடமாக கல்வி அமைப்பில் வைத்திருப்பதையே, “கல்வியில் தமிழ் இருக்கிறது’’- எனக் கருதுபவர்கள் நிறைய இருக்கிறார்கள்.தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங் களையும் கொண்டது பாடமொழி. அறிவியல், பொருளியலை, சமூகவியலை தமிழ் மொழி மூலம் கற்பது பயிற்று மொழி.

கேரளாவில் சென்ற திங்கள் ஒரு சட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மலையாளத்தை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்கு மட்டுமே அரசுத் துறையில் வேலை வாய்ப்பு என்பது அந்தச் சட்டம். முன்பு அரசாணையின் மூலம் கேரள அரசு இதனைக் கடைப் பிடித்து வந்தது. அந்த அரசாணையின் நோக்கத்தை வலிமை பெறச் செய்ய தற்போது சட்டமாகக் கொண்டு வந்திருக்கிறது. கருநாடகத்திலும், ஆந்திரத்திலும் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கணக்காயர் (அக்கவுண்டண்ட் ஜெனரல்) அலுவலகம் நடுவண் அரசைச் சார்ந்தது. இரண்டாண்டுக்கு முன் கணக்காயர் துறையில் அனைத்திந்திய அளவில் தேர்வு நடைபெற்றது. தேர்வு பெற்றவர் களில் பத்தொன்பது தமிழர்கள், பெங்களூர் கணக்காயர் அலுவலகத்தில் பணி அமர்த்தப்பட்டனர். கன்னட மொழி அறியாதவர்களைப் பணி நியமனம் செய்யக் கூடாது என்று தடை விதித்தது கருநாடக மாநில அரசு. தமிழர்களால் பணியில் சேர இயலவில்லை.

நடுவண் அரசு அலுவலகத்தில் மாநில அரசுக்கு என்ன உரிமை என வினவலாம். நடுவண் அரசு ஒரு கொள்கையை வகுத்திருக்கிறது. எந்த மாநிலம் அந்த மாநில மொழியை ஆட்சி மொழியாகவும் கட்டாயக் கல்வி மொழியாகவும் வைத்திருக்கிறதோ, அந்த மொழியிலும் நடுவண் அரசு அலுவலகங்களில் இயங்கும் என்பதுதான் அந்தக் கொள்கை.

கருநாடக அரசின் ஆட்சி மொழியும் கட்டாயக் கல்வி மொழியும் கன்னடம். ஆகவே அது அவர்களுக்குப் பொருந்தும். தமிழ்நாட்டில் தமிழ் விருப்பப் பாடம்தான். விரும்பினால் தமிழ் படிக்கலாம். விரும்பாவிட்டால் இந்தி, சமற்கிதம், பிரஞ்சு, செருமானியம் படிக்கலாம். மழலையர் பள்ளி முதல் உயர் கல்வி வரை தமிழைப் படிக்காமல் பட்டங்கள் பெறலாம். தமிழ் நாட்டில் கல்வியில், ஆங்கில மொழி கட்டாயம். எனவே கட்டாயமாகப் படித்தறிய வேண்டிய ஆங்கிலத்தை தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசின் நிறுவனங்கள் தங்களின் பயன் மொழியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளன. தமிழ் நாட்டில் தள்ளி வைக்கப்பட்ட மொழியாக ஏன், தமிழ் இருக்கிறது?அரசியல். ஆம் எல்லாவற்றிலும் அரசியல் இருக்கிறது. மொழியிலும் அரசியல் இருக்கிறது.

தமிழ் மொழி வளர்ச்சி என்பது தமிழ்ச் சமூக வளர்ச்சி. தமிழ்ச் சமூகத்தை ஒதுக்கி வைக்க, ஓரங்கட்ட, இந்த மொழி அரசியல் தேவைப்படுகிறது. பல நூறு ஆண்டுகளாக, கல்வி மறுக்கப்பட்ட சமூகம், தமிழ்ச் சமூகம். கல்வி என்பதே வேதக் கல்விதான். பாடசாலை என்பதே வேதபாடசாலை தான். சிறுபான்மைக் கூட்டந்தான் வேதம் படித்தது. வேதம் ஓதியது. பெரும்பான்மை மக்களுக்கு வேதம் (கல்வி) மறுக்கப் பட்டது. வேதத்தை ஓதினால் நாக்கு அறுக்கப்படும்; கேட்டால் செவியில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும் என மனு(அ)நீதி கட்டளை இட்டது. 1700 ஆண்டுகள் பிற மொழியாளர்கள் தமிழ் நாட்டை ஆண்டார்கள். அடிமைப் பட்டிருந்ததற்கு அடிப்படைக் கரணியம், தமிழ் மக்களுக்கு கல்வி மறுக்கப் பட்டதுதான். ஆங்கிலேயர்கள் தமிழ் நாட்டை அடிமைப்படுத்தியபோது அவர்களிடம் பீரங்கிகள் இருந்தன. நம்மவர்களிடம் வில், வேல், வாள், ஈட்டிகள் மட்டுமே இருந்தன. இவைகளைக் கொண்டு அவர்கள் ஆங்கிலேயர்களை எதிர் கொள்ள இயலவில்லை.

பூலித் தேவனும், சின்னமருதுவும், கட்டபொம்மனும் ஆங்கிலேயரினும் வீரம் மிகுந்தவர்கள். ஆனால் அவர்களிடம் போர்க் கருவிகள் இல்லை. காலா காலமாய் கல்வி மறுக்கப்பட்டதால், உழைப்பாளி மக்கள் தங்கள் உற்பத்திக் கருவிகளில் முன்னேற்றம் காண இயலவில்லை. ஆடைகளைத் தூய்மைப்படுத்த நீராவியைப் பயன்படுத்தும் “வெள்ளாவி’’ - என்ற முறையை ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே அறிந்திருந்தவர்கள் தமிழர்கள். 16- ஆம் நூற்றாண்டில், நீராவியின் பயன்பாட்டை அறிந்து புதிய புதிய பொறிகளை உருவாக்கினார்கள் ஐரோப்பியர்கள். தொடர் வண்டியை இழுத்துச் செல்லும் பொறிகலனை (இன்ஜினை) உருவாக்கினார்கள்.

ஐரோப்பியாவில் நீராவி பெரிய தொழிற் புரட்சியைக் கொண்டு வந்தது. அங்கே எல்லோருக்கும் வேறுபாடின்றி கல்வி கிடைத்தது. உழைப்பும், கல்வி யறிவும் ஒன்றாக இணைந்ததால், புதிய கண்டுபிடிப்புகளுக்கு உரியவர்களாக அவர்கள் முன்னேறினர். தமிழ் நாட்டில் உழைப்பை மறுத்த- ஒரு சிறுபான்மைக் கூட்டத்தின் கையில் மட்டுமே கல்வி தேங்கிக் கிடந்தது. வெள்ளைக்காரன் வந்த பிறகுதான் பள்ளிகள் திறக்கப்பட்டன. வாய்ப்பு கிடைத்தவர்கள் படிக்கத் துவங்கினார்கள். 1950- களின் துவக்கத்தில், சென்னை மாகாண முதல்வராக வந்த சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியார் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தார். அரை நாள் பள்ளி; அரை நாள் அவரவர் சாதித் தொழில் கல்வி. தெளிவாகக் கூறினால் “அப்பன் தொழில்’’. இதுவே குலக்கல்வி. வேத மரபின் தொடர்ச்சி இக்கல்வி. 600 துவக்கப் பள்ளிகளை மூடினார். இவரின் இச்செயலுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. முதல்வர் பதவியை இராசாசி இழந்தார்.
காமராசர் முதல்வர் ஆனார். ஊர்கள் தோறும் பள்ளிகள் திறக்கப் பட்டன. சிற்றூர்களில் கூட ஓராசிரியர் பள்ளிகள் துவக்கப்பட்டன. மதிய உணவு மாணவர்களுக்குக் கிடைத்தது.

இன்று தமிழ்ச் சமூகத்தின் பல பதவிகளிலும் ஏனைய துறைகளிலும், மேநிலையில் வாழ்பவர்கள் காமராசரின் கல்விக் கொடையால் வளர்ந்தவர்களே! கல்வியையும் தமிழர்களையும் இணைத்தவர் காமராசர்தான். பக்தவச்சலம் முதல்வர் ஆனார். இலால்பகதூர் சாத்திரி தலைமையிலான தில்லி அரசு, இந்தி மொழிப் பாடத்தை கல்வி நிலையங்களில் கட்டாயமாக்க வேண்டுமென, தமிழ் நாட்டரசுக்கு கட்டளை இட்டது. அவ்வாணையை பக்தவச்சத்தின் அரசு ஏற்றுக் கொண்டது. ஆங்கிலம், தமிழ், இந்தி என மும்மொழித் திட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்தி மொழித் திணிப்பை எதிர்த்து மாணவர்கள் கிளர்ந்தெழுந்தார்கள். ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் தமிழ் நாட்டை உலுக்கி எடுத்தது. நாற்பத்தி ஒன்பது நாட்கள் இராணுவத்தின் பிடியில் தமிழ்நாடு இருந்தது. ஐநூறு மாணவர்கள் உயிரிழந்தனர். உலக அளவில் மொழிக்காக இந்த அளவு உயிரிழப்பு நேர்ந்ததில்லை. இந்தி ஒழிக! தமிழ் வாழ்க!- என்பதே மாணவர்களின் முழக்கமாக இருந்தது. மாணவர்களின் மொழிப் போராட்டத்தின் விளைவாகவே பேராயக் (காங்கிரசு) கட்சி 1967-இல் தோற்கடிக்கப்பட்டது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது.

இராசாசியின் சுதந்திர கட்சியுடன் கூட்டணி வைத்து தி.மு.க. வென்றது. “இது இந்திக்கு எதிராக வந்த வெற்றி; இது தமிழுக்கு ஆதரவாகச் சென்றுவிடக் கூடாது; தடுத்து நிறுத்த வேண்டும்’’ - என்று முடிவெடுத்தார் இராசாசி. தமிழுக்கு மாற்றாக ஆங்கிலத்தை முன் வைத்தார் இராசாசி. “இந்தி எப்போதும் இல்லை; எப்போதும் ஆங்கிலம் தான்; (ழiனேi சூநஎநச; நுபேடiளா நஎநச)’’ என்ற அவரது முழக்கம் தி.மு.க. வினரை ஈர்த்தது. 1968-இல் இருமொழிக் கொள்கையை அரசு நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அக்கொள்கை:
பகுதி ஐ தாய்மொழி அல்லது தமிழ் அல்லது பிற இந்திய அயல் நாட்டு மொழிகளில் ஒன்று. - இது விருப்பப்பாடம். பகுதி ஐஐ ஆங்கிலம் - இது கட்டாயப் பாடம். இந்தி அகற்றப்பட்டது. ஆங்கிலம் கட்டாயமாக்கப்பட்டது. தமிழ் விருப்பப் பாடமாகிவிட்டது. விரும்பினால் தமிழ்ப் படிக்கலாம் அல்லது, தமிழை விட்டு விட்டு சமற்கிருதத்தையோ, இந்தியையோ, பிரஞ்சு மொழியையோ பயிலலாம்.

ஆங்கிலம் கட்டாயமொழியாகி, தமிழ்மொழி விரும்பினால் படிக்கலாம்; படிக்காமலும் போகலாம் என்ற இந்தக் கொள்கைதான் தமிழின் இன்றைய அவல நிலைக்கு அடித்தளமிட்டது. பாடமொழி என்ற அளவில் தமிழ் தன்னுரிமையை இழந்தாலும் பயிற்று மொழி தமிழாகவே இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் பேராயக் கட்சி ஆட்சியிலும் இருந்தது போலவே தமிழ், பயிற்று மொழியாக தி.மு.க- வின் தொடக்கக் கால ஆட்சியில் தொடர்ந்தது.

1976- ஆம் ஆண்டு வரை இந்திய உயர் தொழில் நுட்பக் கல்வி தவிர, மற்றெல்லாக் கல்வியும்- மழலையர் கல்வி தவிர, மற்றெல்லாக் கல்வியும்- மழலையர் முதல் பல்கலைப் படிப்பு வரையில்- முற்றிலுமாக மாநில அரசு விரும்பும் வகையில் “கல்விக் கொள்கை’’யை அமைத்துக் கொள்ள மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருந்தது. கல்வி என்பது மாநில அரசுப் பட்டியலில் இருந்தது.இந்திரா காந்தி 1976-இல் அவசர நிலை கொண்டு வந்தார். 3.1.1977 முதல் கல்வி என்பது பொது அதிகாரப் பட்டியலுக்கு கொண்டு சென்றுவிட்டார்.
நடுவண் அரசிற்கும் மாநில அரசிற்கும் கல்வி குறித்த திட்டமிடல் அதிகாரம் உண்டு (ஊரnஉரசசநவே டளைவ) என சட்டமியற்றினார். இதன் விளைவாக மாநில அரசின் “கல்வி’’ முற்றிரிமை தளர்வுற்றது.

அதிகாரத்தை பொதுப் பட்டியலுக்குக் கொண்டு சென்றாலும், மழலையர் பள்ளி முதல் மருத்துவம், பொறியியல், வேளாண்மை, சட்டமுதலான உயர் கல்வி வரை தமிழ் மொழி வழியாக - பயிற்று மொழியாக- கற்பிக்க மாநில அரசுகள் சட்டமியற்றி செயல்படுத்த இயலும். இதை நடுவண் அரசு தடுக்க இயலாது. இந்த விதிகளைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் தங்களின் மாநில மொழியை- தாய் மொழியை- பயிற்று மொழியாகக் கொண்டு இயங்கி வருகின்றன. ஆனால் தமிழ் நாட்டில் இந்த விதி, ஆங்கிலத்திற்கு ஆதரவாக செயல்படுத்தப்படுகிறது.

1977- ஆம் ஆண்டிற்குப் பிறகு கல்வியில் தனியார் துறை நுழைந்தது. கல்வி வணிக மயமாகியது. பணங் கொழிக்கும் செல்வத் தொழிற்சாலையாக பள்ளிகளும் கல்லூரிகளும் மாறிப் போயின. ஆயிரம் ஆண்டுகளாக தங்களுக்கு மறுக்கப்பட்ட கல்வி, தங்கள் பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டும். அக்கல்வி, உயர்நிலைக் கல்வியாக இருக்க வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பதை ஈடேற்ற பள்ளிகள், கல்லூரிகளின் எண்ணிக்கையை உயர்த்த அரசுகள் நடவடிக்கை மேற் கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்ய தனியார்கள் முன் வந்தார்கள். தங்கள் விருப்பம்போல் கல்வி முறையை மாற்றி அமைத்துக் கொண்டனர்.

தமிழ் நாட்டில் 12,536 தனியார் பள்ளிகளும், 500-க்கும் மேற்பட்ட தன்னிதித் தனியார் கல்லூரிகளும் இருக்கின்றன. இவைகளில் ஆங்கிலம், சமற்கிருதம், இந்தி, பிரஞ்சு, செருமானியம் முதலான மொழிகள் பாடமொழிகளாகவும், பயிற்று மொழியாக ஆங்கில மொழியும் இருக்கின்றன. அரசுக் கல்லூரிகளில் எவற்றிலும் தமிழ்ப் பயிற்று மொழியாக இல்லை. பள்ளிகளில் தமிழ்ப் பயிற்று மொழியாக இருந்தது. அதுவும் தற்போது மாற்றம்பெற்று வருகிறது. பள்ளிகளில் தனியார் பள்ளிகள் போல, ஆங்கில மொழியைப் பயிற்று மொழியாக, அரசு ஆதரவு அளித்து வருகிறது. பல அரசுப் பள்ளிகள் இந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டன.மாற்றத்தை ஏற்றுக் கொண்டு விட்டன.
இந்தச் சூழல் எப்படி வந்தது? இக்கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட “தமிழ்ப் படிப்பதால் என்ன பயன்?’’ என்று தமிழர்கள் கேட்பது அரசின் செவிகளுக்குச் சென்று விட்டது.

தங்கள் பிள்ளைகளுக்கு ஆங்கிலம் தான், வாழ்க்கையில் வெற்றியை ஈட்டித் தரும் என்ற கருத்து பெற்றோர்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்திருக்கும் உண்மையை மறக்கக் கூடாது. இந்த கருத்தை விதைத்த சக்திகள் எவை?

இந்த மொழியழிப்புச் சக்திகளை எதிர்கொள்ள நாம் மக்களைச் சந்திக்க வேண்டும். அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். மக்கள் தமிழ் மொழிமீது கொண்டிருக்கும் நம்பிக்கையின்மையை தகர்க்க வேண்டும். பாட மொழி, பயிற்று மொழி குறித்த தெளிவை உருவாக்க வேண்டும். இந்த மண்ணில் விளைந்த மொழி, தமிழ். இந்த மொழிதான் இயற்கையான மொழி. உலக அறிஞர்கள் இப்படித்தான் கூறுகிறார்கள். மக்கள் பேசும் தாய் மொழி தவிர வேறு எந்த மொழியிலும் சிந்திக்க இயலாது. ஆயிரம் மொழிகள் அறிந்திருந்தாலும் சிந்திக்கும் செயல் தாய் மொழியில்தான் நிகழும்.

மொழி அறிவு வேறு. சிந்தனை அறிவு வேறு. பொறியியலை ஆங்கில மொழியில் பயில்கிறார்கள். இவர்கள் பொறியியலின் செயல்பாடு குறித்த தகவல்களை அறிந்து கொள்கிறார்கள். ஆனால் இயல்பான சிந்தனை மொழியாக அது இல்லாததால் ஆய்வுகளை அவர்கள் நிகழ்த்த இயலவில்லை. புதிய கண்டு பிடிப்புகளை கொண்டு வர முடியவில்லை. இதுதான் உண்மை.

உலகின் முதல் நூறு கண்டு பிடிப்புகளில் எழுபது கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. வரலாற்றில் பெரும் அறிவியலாளராக ஏற்கப்பட்ட ஐன்°டீன் ஆங்கிலக் கல்வியில் தோல்வியுற்றார். அறிஞர் அண்ணா பத்தாம் வகுப்பில் ஆங்கிலத் தேர்வில் தேர்வு பெற இயலவில்லை. பெருமையாகப் பேசப்படும் பரிசு நோபள் பரிசு. இந்த பரிசு பெற்றவர்களில் எழுபத்தி ஐந்து விழுக்காட்டினர் அவர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் எழுதவில்லை. இரவீந்தரநாத் தாகூர் நோபள் பரிசுப் பெற்றார். அவருடைய தாய் மொழி வங்காளம். வங்காள மொழியில்நோபள் பரிசு பெற்றார்.

உலகைத் தலைகீழாகப் புரட்டிப் போட்ட புரட்சி மெய்யியலை (தத்துவத்தை)த் தந்தவர் கார்ல் மார்க்சு புகழ் பெற்ற “மூலதனம்’’ என்ற நூலை, தன் தாய் மொழியான செருமானிய மொழியில்தான் எழுதினார். காந்தியடிகள் தனது வரலாற்றை (சத்திய சோதனை) தன் தாய் மொழியான குசராத் மொழியில்தான் எழுதினார். இங்கிலாந்தில் படித்துப் பட்டம் பெற்ற அவர் ஆங்கிலம் அறியாதவரா? ஆங்கிலத்தில் எழுத இயலாதவரா? உளமாற ஒரு செய்தியைச் சொல்லச் சரியான அறிவுத்தொடர்பு, தாய் மொழி வழியேதான் முடியும் என்று அவர்கள் எல்லாம் கருதினார்கள். தமிழ் மொழிக்கு இன்று ஏற்பட்டிருக்கும் அவல நிலை ஆங்கிலத்திற்கும் ஏற்பட்டதுதான். பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலம் வரை இங்கிலாந்தில், பிரஞ்சு அரசியல் மொழி, இலத்தீன் சமயமொழி, கிரேக்கம், உரோமானியம் இலக்கிய மொழி.

விழிப்படைந்த ஆங்கிலேயர்கள் கிளர்ச்சி செய்து ஆண்ட மன்னனை அச்சுறுத்தி தங்கள் மொழியை முதன்மையான இடத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆங்கிலம் தமிழ் மொழி போல தொன்மை மொழி அல்ல. எனவே அதில் அறிவியல் சொற்கள், கலைச் சொற்கள் இல்லை. ஏனைய மொழிச்சொற்களை இணைத்துக் கொண்டு எங்கும் ஆங்கிலம்; எதிலும் ஆங்கிலம் என்று நடைமுறைப் படுத்தினர். தமிழுக்கு அந்தச் சிக்கல் இல்லை. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் நம்மிடம் சொற்கள் இருக்கின்றன. அறிவியல் சொல்லாக்கத்தில் ஆங்கிலத்தை மிஞ்சும் பொருள் பொதிந்தச் சொற்கள் தமிழில் உள்ளன. சான்றாக கணணிப் பொறியில் ஒரு சிறு பகுதி “மவு°’’ என்றழைக்கப் படுகிறது. சுண்டெலி போலத் தோற்றம் இருப்பதால் அதை “மவு°’’ என்று ஆங்கிலத்தில் கூறுகிறார்கள். அதைத் தமிழில் “சுட்டி’’ எனக் கூறுகிறோம். சுட்டுவதால் அது “சுட்டி’’.

தோற்றத்தை வைத்து ஆங்கிலம் பேசுகிறது செயல்பாட்டை வைத்து தமிழ் “சுட்டி’’ என்கிறது. தமிழால் முடியாதது என்று எதுவுமில்லை. ஆங்கிலம் அறிந்தால்தான் வாழ முடியும் என்பது ஒரு புனைவு. மிகவும் வளர்ச்சியடைந்த சீனம், சப்பான், உருசியா, பிரான்சு, செருமனி போன்ற பல நாடுகளில் ஆங்கிலம் இல்லை. இந்த நாடுகளின் தலைவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆங்கிலேயர்கள் ஆண்ட நாடுகளில் தான் ஆங்கிலம் புழங்குகிறது. வட அமெரிக்க, ஆத்திரேலியா, கனடா போன்ற ஆங்கிலேயர்கள் குடியேறிய நாடுகளில் ஆங்கிலம் இருக்கிறது. இந்த நூற்றாண்டில், தகவல் தொடர்பில், கணணி ஒரு சிறப்பானப் பங்கையாற்றுகிறது. எல்லையற்ற அதன் அறிவுப் பாய்ச்சலுக்கு சப்பான் நாடு ஈடு கொடுக்கிறது.  எந்த அறிவியல் புதிய கண்டு பிடிப்புகளையும் சப்பான் மொழிக்கு மொழி மாற்றம் செய்ய இரண்டாயிரம் மொழி பெயர்ப்பாளர்களை அது பணியமர்த்தி யிருக்கிறது. அவர்கள் விரைந்து செயல் படுகிறார்கள். 

அவைகள் சப்பானிய மொழியில் வந்து அனைவருக்கும் சென்று சேர்ந்து விடுகிறது. (தமிழுக்கும் மொழி பெயர்ப்பாளர்கள் இருக்கிறார்கள்). இதற்காக சப்பானில் உள்ள மக்களை யெல்லாம் ஆங்கிலம் கற்க கட்டாயப் படுத்துவதில்லை. ஆங்கிலம் தீராத சுமை என்பதை அறிவார்ந்த சப்பானியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ் நாட்டு அரசியலாளர்களுக்கும், இவை யெல்லாம் தெரிந்ததுதான். ஆங்கிலத்திற்கு அடுத்த நிலையில், தமிழ் மொழியில்தான் இணையதளங்கள், மின்னஞ்சல் முகவரிகள் இயங்குகின்றன என்ற செய்தி எத்துணை பேருக்குத் தெரியும்? “குறுஞ்செய்தி’’ (எ°. எம். எ°)யைக் கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்? ஆங்கிலக் கல்வி அந்நியப்படுத்தும் கல்வி. மண்ணிடமிருந்து வாழும் மக்களிடமிருந்தும் அந்நியப்படுத்தும் கல்வி. 

தமிழ் மொழி, பயிற்று மொழி என்பதால் ஆங்கில மொழியே வேண்டாம் என்பதல்ல. ஆங்கிலத்தை சிறப்பாக அறிந்து கொள்ளவும் பேசவும் எழுதவும் அறிந்திருப்பது நல்லதுதான். அது ஒரு பாட மொழியாக மொழிக் கல்வியாக இருக்கலாம். ஆனால் ஆங்கிலம் பயிற்று மொழியாக இருப்பது அறிவுத் திறனுக்கு எதிரானது. இயல்பு நிலைக்கு முரணானது. நவ இந்தியா- என்ற ஏட்டில் 5.7.1928 அன்று காந்தியடிகள் எழுதிய கட்டுரையில் ஒரு பகுதி: “எனக்குமட்டும் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரம் இருக்குமானால், நமது சிறுவர், சிறுமியருக்கு அந்நிய மொழியில் பாடம் கற்பிப்பதை உடனடியாக நிறுத்திவிடும்படி உத்தர விடுவேன். இக்கட்டளைக்கு மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவேன். பாட புத்தகங்கள் வெளிவரும் வரை காத்திருக்க மாட்டேன். பயிற்சி மொழி மாறினால், பாடப்புத்தகங்கள் தாமாகவே வெளிவரும். முற்றிய நோய்க்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை’’.நம்பிக்கைக் கொள்ளுங்கள். தமிழால் முடியும்!

திசம்பர் 2013 “இப்படிக்கு” இதழில்...