Friday 26 June 2015

வித்தகத் தந்திரங்கள்: முனைவர்.வே.வசந்தி தேவி

இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

“ஆளும் கருத்துகள், ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே” - கார்ல் மார்க்ஸ்.

புதிர் : ஒரு கோடு கிழிக்கவும். அதில் எந்த மாற்றமும் செய்யாமலே, அதைச் சிறியதாக்க வேண்டும்.

விடை: கோட்டுக்குப் பக்கத்தில் அதைவிட நீளமான கோட்டைக் கிழித்தால், முதல் கோடு சிறியதாகிவிடும்.

ஊர்ப் பொதுக் கிணற்றில் சில சாதியினர் தண்ணீர் எடுக்கக் கூடாதென்று விலக்கி வைத்துப் பாகுபாடு காட்டிய காலம் உண்டு. இன்று அவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம். ஆனால், ஊரில் வசதி படைத்த சிலர், பக்கத்திலேயே ஒரு பெரிய கிணற்றை வெட்டி, ஏகப்பட்ட தண்ணீரை அதில் சேகரித்து, பழைய கிணற்றின் தண்ணீரையும் இதற்குத் திருப்பிவிட்டு, கிணற்றில் யார் வேண்டுமானாலும் தண்ணீர் எடுக்கலாம்; ஆனால், ஒரு குடம் ரூ.20 என்று நிர்ணயித்துவிட்டால் அது சட்ட விரோதமில்லை. ஆனால், அந்த விலை கொடுத்து யாரால் வாங்க இயலும்?

“எங்களோட ஒரு நாள் கூலி முழுசும் தண்ணிக்கே போயிடுமே! எங்களால எப்படி முடியும்?”

“அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்? நீங்க தண்ணி எடுக்கக் கூடாதுன்னு நாங்க ஒண்ணும் பாகுபாடு காட்டலையே!”

கதியற்றவர்களின் குரல்

சென்ற நூற்றாண்டின் அறுபதுகளிலும் எழுபதுகளிலும் கூட மிகப் பெரும்பாலான பள்ளிகள், அனைத்து வர்க்க சாதிக் குழந்தைகள் ஒன்றாகக் கற்கும் பொதுப் பள்ளிகளாகத்தான் இருந்தன. அவற்றில் கற்று வெளிவந்த மாணவர் முன் ஒரு சம தளம் இருந்தது. அடித்தட்டு மாணவர்களும் வசதி படைத்தவருடன் சமமாகப் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. 70-களின் இறுதியில் தனியார் பள்ளிகள் வளரத் தொடங்கி, பல்கிப் பெருகி, இன்று கல்வியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை வெவ்வேறு மட்டப் பள்ளிகள். ஆயிரம் உண்டிங்கு சாதி என்பதுபோல், ஆயிரம் மட்டம் கொண்ட அமைப்பு. சாதியப் பிரமிடில் ஒவ்வொரு சாதிக்கும் உரிய இடம் துல்லியமாகக் குறிக்கப்பட்டிருப்பதைப் போல், ஒவ்வொரு மட்டப் பள்ளிக்கும், அது வசூலிக்கும் கட்டணத்தைப் பொறுத்து, கல்விப் பிரமிடில் இடம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலே போகப் போக, கட்டணம் அதிகரிக்க அதிகரிக்க, அது தரம் உயர்ந்த பள்ளி என்று விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அந்தக் கோணத்தில் அடித்தட்டில் ஏழைகளுக்கு மட்டுமேயான, இலவசக் கல்வி அளிப்பவை அரசுப் பள்ளிகள். ஏழைகளுக்கு மட்டுமே உரிய அனைத்தும் தரமற்றவை என்பதும் விவாதத்துக்கு அப்பாற்பட்டதாக ஆகிவிட்டதால், அரசுப் பள்ளிகள் தரமற்றவை என்பது அரசாலேயே ஒப்புக்கொள்ளப்பட்டுவிட்டதைப் போல் ஒரு தோற்றம் உருவாகிறது. அதனால்தான் அரசுப் பள்ளிகளில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரை அரசே `கருணை' கொண்டு தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகிறது. ஏழைகளுக்கு மட்டுமே ஆனவை கொடுமையான புறக்கணிப்புக்கும் எளிதாக இலக்காகிவிடுகின்றன. அப்பள்ளிகளில் போதுமான ஆசிரியரோ, வகுப்புக்கு ஒரு ஆசிரியரோ, மேல் வகுப்புகளில் பாடத்துக்கேற்ற ஆசிரியரோ, தேவையான கண்காணிப்போ, கட்டுமான வசதிகளோ எவையும் நிறுவ வேண்டிய கட்டாயமில்லை. குரலற்றவர்களின், கதியற்றவர்களின் தேவைகளுக்கு அரசு என்று செவிசாய்த்தது?

புறம்தள்ளும் உத்திகள்

இந்தியக் கல்வி அமைப்பு சாணக்கியத் தந்திரத்துடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிரமிடின் உச்சியில் இருக்கும் 5 முதல் 10 சதவிகிதத்தினர் மட்டுமே வென்றெழுந்து அனைத்து வாய்ப்புகளையும் அள்ளிக்கொண்டு போவதற்கு ஏற்றவண்ணம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. மற்றவரின் திறமைகளெல்லாம் அழித்தொழிக்கப்பட்டு, போட்டியிடும் சக்தியை இழக்கின்றனர். கல்வியின் மூலம் சக்தி வாய்ந்த சமுதாய உருவாக்கம் நடக்கின்றது. அதற்குத் தகுந்த பல உத்திகள். பெரும்பான்மையினரை வாய்ப்பு வட்டத்தினின்று புறம்தள்ளும் உத்திகள். ஜனநாயகத்தின் மொழியைப் பயன்படுத்தியே தன் பாகுபடுத்தலை நிறைவேற்றிக்கொள்ளும் உத்திகள். ஏகலைவர்களுக்குக் கற்பிக்க முடியாது என்று இன்றைய துரோணாச்சாரியர்கள் சொல்ல முடியாது. ஆனால், கற்கும்

'தகுதி', 'மெரிட்'

யாருக்கு உண்டு என்பதற்கு விதிகளை, இலக்கணத்தை, வடிகட்டிகளை நிர்ணயிக்கலாம். இன்றைய நுழைவுத் தேர்வுகள் அனைத்தும் (ஐ.ஐ.டி. - ஐ.ஐ,எம். நுழைவுத் தேர்வுகள்) இவ்வகையில்தான் வடிவமைக்கப்படுகின்றன. எனக்கு மிகப் பிடித்த கார்ட்டூன் : டென்னிஸ் தெ மெனெஸ் என்ற 5 வயது படுசூட்டிகைச் சிறுவன், தன்னிலும் பொடியவனான ஜோயிக்கு விளையாட்டு ஒன்றைக் கற்றுக்கொடுத்துக்கொண்டு சொல்கிறான்: “இதை நினைவில் வைத்துக்கொள் ஜோயி. விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ ஜெயித்துவிடலாம்.” இந்தியக் கல்வி அமைப்பும், கொள்கையும், விதிகளும் மேல் வர்க்க சாதியினரால் அவர்களது நலனுக்காகவும் அவர்களது ஆதிக்கம் தொடர்வதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பெரும்பாலான குழந்தைகளின் இழப்புக்காக, அவர்களை ஒதுக்குவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

ஆங்கிலம்; வெற்றிக்கான மந்திரக்கோல் அல்ல!

ஒரு முக்கிய உத்தி, ஆங்கில வழிக் கல்வி. ஆங்கில வழிக் கல்வியே தரமானது, தமிழ் வழிக் கல்வி தரமும், தகுதியும் அற்றது என்ற எண்ணம் சமுதாயம் முழுவதும் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டு, மாணவர்களெல்லாம் தமிழ் வழியிலிருந்து ஆங்கில வழிக்கு மாறுகின்றனர். ஆங்கில வழிக் கல்வியைச் சிறப்பாகக் கற்று, அதில் முதன்மை பெற்று, அதன் வழியே போட்டி உலகில் வெற்றிகளைத் தட்டிக்கொண்டு போவது யாருக்கு இயலும்? வசதி படைத்தவர்களுக்கு, ஆங்கிலம் சரளமாக வீட்டில் புழங்கும் சூழல் உடையோருக்கு, கல்விப் பாரம்பரியம் கொண்ட சாதிகளுக்குத்தான் இயலும். இன்று தெருவுக்குத் தெரு, சிற்றூர்களில் கூட முளைத்திருக்கும் ஆங்கிலப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களால் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இந்தப் பள்ளிகளில் கஷ்டப்பட்டுத் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைக்கும் தலித், பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களால் அப்படி ஒன்றும் வாய்ப்புகளைத் தட்டிக்கொண்டு போக முடியவில்லை. இவர்களில் பலர் 8 அல்லது 10 வகுப்புக்குள் பள்ளியிலிருந்து விலகிவிடுகின்றனர். ஆங்கில வழிக் கல்வி வெற்றிக் கதவைத் திறக்கும் மந்திரக் கோல் என்பது இவர்களைப் பொறுத்தவரை உண்மையல்ல.


இருளில் ஒரு தலைமுறை

இதற்குக் காரணம், பெரும் 'எலிட்' பள்ளிகள் தவிர்த்த மற்ற பெரும்பாலான ஆங்கில வழிப் பள்ளிகளின் தரம். ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் தரமான கல்வி கற்றுத்தரப்படுகிறது என்பது பொய். புற்றீசலாகப் புறப்பட்டிருக்கும் இந்தப் பள்ளிகளில் கற்றுத் தரும் ஆசிரியர்கள் யார்? குறைந்த சம்பளம் வாங்கிக்கொண்டு கசக்கிப் பிழியப்படும் பெண்கள் பட்டாளம். இவர்கள் அனைவருமே தமிழ் வழியில் கற்றவர்கள். சொல் புரியாத, பொருள் புரியாத, உச்சரிப்புத் தெரியாத ஓர் ஆங்கிலக் கல்விதான் இவர்கள் கற்றுத் தருவது. மனப்பாடமே கல்வியென்ற சீரழிவுதான் இந்தப் பள்ளிகளில் காண்பது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆர்.கே. நாராயணன் நாடாளுமன்றத்தில் பேசினார்: “இந்தியக் கல்வியின் சாபக்கேடு புரியாமை என்னும் கொடுமை.” சபிக்கப்பட்ட வகுப்பறையின் இருளில் ஒரு தலைமுறை உருவாகிறது. எந்த நாட்டிலும் தாய் மொழி அன்றி, வேறு மொழி வழியே கற்பிக்கும் தகுதி வாய்ந்த லட்சக் கணக்கான ஆசிரியர்களை உற்பத்தி செய்யவே முடியாது. ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகக் கற்றுத் தருவதற்குத் தேவையான ஆசிரியரைத்தான் உருவாக்க முடியும்.

ஆதிக்க சக்திகளின் முடிவு

தமிழ் வழிக் கல்வியென்றால், அதில் திறன் பெறுவது அனைவருக்கும் இயலும். ஆங்கில வழி என்றால், மேல் சொன்னவர்களால் மட்டுமே இயலும். தங்களுக்குப் பெரும் அனுகூலம் அளிக்கும் வழியே சிறந்தது என்று அனைவரையும் நம்பவைத்து, அவ்வழியில் கற்க இயலாத பெரும்பான்மைக் குழந்தைகளை அதற்கு இழுத்து வந்து, அதில் அவர்களை மருகிக் கருக வைத்து, தாங்களே சிறந்தவர் என்று வெற்றிவாகை சூடிக்கொள்ளும் வழி.

பெரும்பாலான குழந்தைகளுக்கு எதிராக இருப்பவை பல்மட்டப் பள்ளிகளும், ஆங்கில வழிக் கல்வியும் மட்டுமல்ல. கல்வி அமைப்பின் ஒவ்வொரு இழையிலும் பாகுபடுத்தல் பின்னிப் பிணைந்திருக்கிறது. பாடத்திட்ட சுமை, வயதுக்கு அதிகமான, குடும்பத்திலும், டியூஷனிலும் உதவி பெறாமல் கற்க முடியாத சுமை, கற்றல்-கற்பித்தல் முறைகள், மதிப்பீட்டு முறைகள், வகுப்பறைச் சூழலும், மொழியும் என அனைத்தும் அடித்தட்டுக் குழந்தைகளை அச்சுறுத்தி விரட்டுபவை. வசதி பெற்ற குழந்தைகளுக்குப் போட்டி உலகில் வெற்றியை உறுதி செய்பவை.

இப்படிச் சொல்லும்போது, ஏதோ ஆதிக்க வர்க்க சாதியினர் ரகசியமாகக் கூடி, ஒரு சதித் திட்டத்தைத் தீட்டி, படிப்படியாக நிறைவேற்றுகின்றனர் என்பது அல்ல பொருள். ஒரு சமுதாயத்தில் ஆதிக்க சக்திகள் கருத்துகளையும், மதிப்பீடுகளையும், சமுதாயத்தின் முடிவுகளையும், பல வகைகளில், ஒளிந்தும், மறைந்தும், வெளிப்படையாகவும் அவ்வாறுதான் ஆட்கொள்கின்றன. இக் கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள மார்க்ஸின் வார்த்தைகளுக்கு அதுதான் பொருள்.

ஓர் அரசியல்வாதி இவ்வுண்மையை மறைவின்றிச் சொல்கிறார், “இந்தியாவில் யார் அரசு அமைப்பது என்பதை மக்கள் முடிவு செய்கிறார்கள். அந்த அரசு என்ன செய்யும் என்பதை ஆதிக்க சக்திகள் முடிவுசெய்கின்றன.” இதற்கு மாற்றினைத் தோற்றுவிக்கும் பூகம்ப சக்தி இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா? இன்று நிச்சயம் இல்லை. நாளை தோன்றுமா?

- வே. வசந்தி தேவி, கல்வியாளர்,
மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்,
தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் மத்திய அரசு விருப்பம்


நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒரே பாடத்திட்டம் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அரசு விருப்பம். உயர்கல்வியில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கொண்டு வருவதற்கான, புதிய கல்விக் கொள்கை குறித்து, ஜூலை, 24ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில், நாடு முழுவதும் பல வகை பாடத்திட்டங்கள் உள்ளன.

இதில், உயர்கல்வி படிப்புகள் மட்டும், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகக் கட்டுப்பாட்டில் அமலாகின்றன. ஆனால், பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை, மாநிலங்கள் மற்றும் ஒவ்வொரு பல்கலைக் கழகங்களிலும் தனித்தனியே இருக்கின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வர, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதியகல்விக் கொள்கை வரைவு விதிகளை, மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. 



மாற்றம்:

இதன்படி, 20 அம்சங்களில் மாற்றம் வரவுள்ளது:l கல்வித்தரத்தை உயர்த்துதல்; கல்வி நிறுவனங்களின் தர மதிப்பீட்டு முறையில் மாற்றம் கொண்டு வருதல்; மத்திய பல்கலைகளை அதிகரித்தல்; மாநில பல்கலைகளின் தரத்தை மேம்படுத்துதல். l உயர்கல்வியில், மாணவர்களின் திறன் வளர்ப்புக்கு அதிக முக்கியத்துவம்; நாடு முழுவதும் திறந்தவெளி மற்றும் ஆன்லைன் படிப்புக்கு முக்கியத்துவம் அளித்தல்; தொழில்நுட்ப வசதிகளை மேம் படுத்துதல்; மாநில அளவில், மண்டல அளவில் பாகுபாடுகள் இல்லாத, ஒரே பாடத்திட்டம்; மிகச்சிறந்த ஆசிரியர்களை உருவாக்குதல். l தனியார் நிறுவனங்களுடன் இணைந்து புதிய பாடத்திட்டம் உருவாக்குதல்; தொழில் துறை களுடன் இணைந்து நவீன தொழிற்கல்விப் பாடங்களை புகுத்துதல்; ஆய்வுப் படிப்புகளை அதிகரிப்பது; சர்வதேச அளவில் இந்திய உயர்கல்வி முறையை மாற்றுவது. 

இத்தனை அம்சங்கள், புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்று உள்ளன.உத்தரவு இந்த கல்விக் கொள்கையின் விரிவான தகவல்கள், மத்திய மனிதவள மேம்பாடுஅமைச்சக இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. இந்த கொள்கை குறித்து, அனைத்துக் கல்லுாரிகள், பல்கலைகள் சார்பில், தங்கள் கருத்துக்களை ugc.nep@gmail.com என்ற முகவரிக்கு, ஜூலை 24ம் தேதிக்குள், இ-மெயிலில் அனுப்ப வேண்டும் என, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது. 2.75 லட்சம் பேர் கருத்து பதிவு மத்திய அரசின், தற்போதைய கல்விக் கொள்கை, 1986ல் கொண்டு வரப்பட்டு, 1992ல் மாற்றப்பட்டது. தற்போது மக்கள்தொகை அதிகரிப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி, கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி தேவை போன்றவைகளின் அடிப்படையில், புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்படுகிறது. இதில், மத்திய மனிதவள மேம்பாடு அமைச்சகம் மூலம், தினமும், ஆன்லைன் வழியே விவாதங்கள் நடத்தப்படுகின்றன. இதில், பொதுமக்களும், கல்வியாளர்களும் பங்கேற்கலாம். இதுவரை, 2.75 லட்சம் பேர், புதிய கல்விக் கொள்கை குறித்து தனித்தனியே கருத்து கூறியுள்ளனர். ஆன்லைன், டி.டி.எச்., முறையில் கல்வி தற்போது, ஆன்லைன் கல்விபிரபலமடைந்துள்ளதுடன், சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.



ஆன்லைன் படிப்புக்கு பல்கலைகளில் இருந்து ஏராளமான விண்ணப்பங்கள் வந்துள்ளன. எனவே, ஆன்லைன் மற்றும் திறந்தவெளி தபால் வழிக் கல்வியை அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக, மனிதவள மேம்பாடு, சமூக அறிவியல், பண்பாடு போன்றவற்றில் படிப்புகளை அறிமுகம் செய்யலாம். வீடியோ பாடங்கள், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் வகுப்புகள் எடுக்கலாம். ஆன்லைன் வசதியில்லாத கிராமங்கள் அல்லது அனைத்துப் பகுதிகளுக்கும், டி.டி.எச்., வசதி அளித்து, பாடங்கள் நடத்தலாம் என, புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஒழுங்காக பாடம் நடத்தாத ஆசிரியரை என்ன செய்யலாம்? புதிய கல்விக் கொள்கையில் சில விவாதங்களும் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. 

1 பல்கலை விதிகளில் மாற்றம் வேண்டுமா? 
2 துணைவேந்தர் நியமனத் தில் தேடல் குழு முடிவு தேவையா? 
3 கல்லுாரிகளின் அதிக செலவுக்கு, கல்லுாரி முதல்வர்மீது பொறுப்பு கொண்டு வரலாமா? 
4 ஒழுங்காக பாடம் நடத்தாத ஆசிரியரை, என்ன செய்வது; பணியிட மாற்றம் செய்யலாமா; கவுன்சிலிங் தரலாமா அல்லது நீக்கி விடலாமா; நீக்க முடி வெடுத்தால், அதற்கு உங்கள் ஆதரவு உண்டா? 
5 ஆசிரியர்களின் பயிற்சிக் காலத்தை ஐந்து ஆண்டு களாக அதிகரிக்கலாமா? 

ஏழை மாணவர்களுக்கு தனி கட்டண முறை புதிய கல்விக் கொள்கை தொடர்பாக, மத்திய அரசு சில கேள்விகளை கேட்டுள்ளது. 

அதில் ஒன்று: 

மாநிலங்களில் கல்வி நிறுவனங்களை ஒழுங்கு படுத்த என்ன செய்யலாம்? இதற்கான பதில்களில் ஏதேனும் ஒன்றை 'டிக்' செய்யவேண்டும்: 
1 பல்கலை இணைப்பு முறையை மாற்றலாம். 
2 வெளிப்படையான நிர்வாகம் கொண்டு வந்து, கல்வி நிறுவனங்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்கலாம். 
3 வருவாய் அதிகம் உள்ள, தகுதியுடைய மாணவர்களுக்கு உரிய கட்டணம்; ஏழை மாணவர்களுக்கு, குறைந்த கட்டணம் நிர்ணயிக்கலாம்.
நன்றி: தினமலர் நாளிதழ்
மேலும் தகவல்களுக்கு:

Thursday 25 June 2015

8th NATIONAL TEACHERS SCIENCE CONGRESS-2015

The National Council for Science & Technology Communication (NCSTC), Department of Science & Technology, Government of India started National Teachers' Science Congress (NTSC) in the year 2003, as a biennial activity. NTSC aims at providing a platform to the science and mathematics teachers to communicate their ideas, share newer experiments in teaching methodology and science education.

  • To provide an opportunity to science teachers to present their innovative approaches in science teaching, before the teaching community;
  • Allow teachers to pick up good ideas of other teachers and use them in their teaching practices;
  • To attend and imbibe lecture sessions of scientists/educationist and get inspiration from them.
Science and technology awareness and education is a challenging task before the nation. The success of science education depends largely on the effective teaching done at the school level. It has to be understood that science is both a process as well as a product. The method of science involves formulation of a hypothesis, testing, data collection, observation, analysis and drawing inferences based on the gathered information.

The challenge before the teachers is that learners should imbibe the methods of science for learning. In today's scenario, where both the teachers and the students are heavily burdened by the curricula, the students often resolve to rote learning rather than imbibing the method of science. As a result, the learning is compromised, and in order to improve the science communication, teachers experiment with the innovative methods of teaching and learning.

Keeping this premise in view, the focal theme of 8th NTSC has been chosen as Learning Science by Doing. Findings of many researches reveal that learners retain much more and comprehend easily through practice of learning science by doing. The theme for the present edition of NTSC will give an opportunity to the teachers to learn newer practices in communicating science and technology through learning by doing and hands-on experimentations.

  1. Innovative use of low cost / no cost teaching learning materials
  2. Challenges of Science, Technology, Engineering and Mathematics (STEM) education - from schools to society
  3. Science for self-reliance
  4. Innovative assessment techniques
  5. Inclusive STEM education
  6. Innovative vocational science education

Teachers of upper primary, secondary and Sr. secondary levels will be encouraged to present papers on the above mentioned themes and sub themes, the core approach should be that of "Participatory learning". The teachers will be further required to give details of their tools adopted for imparting innovative teaching learning experiences, learning science by doing and experimentation.

Besides teachers educators of vocational/open schools/teachers educators/DIET faculty/B.Ed and university researchers, scientists, technologists and activists are also eligible to submit their papers.

NCSTC is contemplating Regional Orientation Workshops to orient teachers on the theme and spirit of 8th NTSC - Learning Science by Doing. The workshops aim at enabling teachers to fine-tune their paper submission process. Accordingly, it is proposed to hold FIVE Regional Orientation Workshops at the Regional Institutes of Education - Ajmer, Bhopal, Bhubaneswar, Mysore, and Shillong.

The interested teachers can register themselves for the Workshop. Due to limited number of seats, the selection would be on the merit, based on a write-up of about 500 words of their work on any of the sub-themes, mentioned hereinabove. The teachers should give brief details of their innovative teaching methodologies, techniques and models used, in either English or Hindi language. And send it as a hard copy to the National Convenor, 8th NTSC, c/o Marathi Vidnyan Parishad, Vidnyan Bhavan, V N Purav Marg, Sion-Chunabhatti (E), Mumbai 400 022, or email as soft copy to mvp@8thntsc.org, and indub.puri@nic.in, latest by June 30, 2015.

Teachers can also submit their papers directly, i.e., without participating in the Orientation Workshop. Shortlisted papers would be invited for either oral or poster presentation during the 8th National Teachers' Science Congress, to be held during the month of December 2015. The dates and the venue for the national level event would be uploaded on the websiteswww.dst.gov.in and www.8thntsc.org

Full paper for the 8th NTSC should be of 2000 words maximum, along with an abstract of 200 words and 4-5 key words. The paper should be typed in Arial, 12 point font size, 1.5 line spacing, single side, black colour, in MS word format. As mentioned earlier, papers and subsequent presentations can be in either English or Hindi language. Time given for oral presentation would be 15 minutes, followed by 10 minutes for interaction. For poster presentation, 4 posters of 70 x 55 cm size, each would be allowed. Last date for paper submission is September 10, 2015.

Each participant can submit only one paper. There is a limited provision for providing local hospitality and travel assistance to the invited participants.

Wednesday 24 June 2015

மழலையர் பள்ளிகளில் பயிற்றுமொழி குறித்து அவசியம் வரையறுக்கப்படுதல் வேண்டும்: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

எந்தவித வழிகாட்டுதலும் வரையரையும் இல்லாமல் மாநிலம் முழுவதும் புற்றீசல் போல பெருகிவிட்ட மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நண்பர்.பாலசுப்பிரமணியன் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. இந்த விதிமுறைகளை விரைவில் இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் கண்டிப்புடன் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தமிழக அரசு மழலையர் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்-2015 ஐ இணையதளத்தில் வெளியிட்டு மக்களிடம் கருத்துகளைக் கேட்டிருந்தது. தமிழகத்தில் மழலையர் பள்ளிகள், மழலையர் முன்பருவப் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து விவாதித்த தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசின் தொடக்கக் கல்வி இயக்குநருக்கு பின்வரும் திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. 

ஏற்கனவே இயங்கி வருகின்ற மழலையர் பள்ளிகள் சட்டம் நடைமுறைக்கு வந்த 3 மூன்று மாதங்களுக்குள் அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை அளிக்க வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள அம்சங்களை அப்பள்ளிகள் பூர்த்திசெய்திட வேண்டும் எனவும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.. தேவையான வசதிகளைப் பூர்த்தி செய்யாத, பூர்த்தி செய்ய இயலாத, ஏற்கனவே இயங்கி வருகின்ற பள்ளிகளுக்கான அங்கீகாரம் / அனுமதி மறுக்கப்படுதல் வேண்டும் ; குழந்தைகளின் நலனில் எவ்வித சமரசமும் கூடாது. அல்லது என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையேனும் தெளிவுபடுத்திட வேண்டும். 

விண்ணப்பித்துள்ள பள்ளிகளை பார்வையிடும் குழுவில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமின்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் போன்ற தன்னார்வ மக்கள் இயக்கங்களைச் சேர்ந்த கல்வி உரிமைச் செயல்பாட்டாளர்கள், குழந்தை உரிமை ஆர்வலர்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே அங்கீகாரம் வழங்குதல், புதுப்பித்தல் ஆகிய நடைமுறைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். 

ஒரு மழலையர் பள்ளி இயங்குவதற்கு குறைந்தபட்சம் எவ்வளவு பரப்பளவிலான இடம் தேவை என்பது தெளிவாக வரையறுக்கப்படவேண்டும்.. இத்தனை குழந்தைகளுக்கு இத்தனை கழிப்பறைகள் தேவை எனவும், இவ்வளவு பரப்பளவிலான விளையாட்டு மைதானம் தேவை என்பதையும் திட்டவட்டமாக வரையறுக்க வேண்டும். 

ஒன்றரை வயதுக் குழந்தைகள் தேவைப்படும் வேளைகளில் தூங்குவதற்கு இரண்டடி உயரத்திலான தொட்டில்கள் அவசியம் அமைக்கப்படுதல் வேண்டும்.. வீட்டில் இருக்கின்ற பாதுகாப்பு உணர்வுடன் குழந்தைகள் தூங்கமுடியும். 

மழலையர் பள்ளிகளில் பயிலக்கூடிய குழந்தைகளைப் புரிந்துகொள்ள, அவர்களுக்கான திறன்களை வளர்த்தெடுக்க ஆசிரியர் பயிற்சி / இளங்கலை கல்வியியல் ஆகிய படிப்புகளுடன் மாண்டிசோரி பயிற்சி முடித்தவர்களாக இருக்க வேண்டியது மிக அவசியம். 

பயிற்றுமொழி குறித்து அவசியம் வரையறுக்கப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
-நன்றி: தீக்கதிர் நாளிதழ்

Sunday 21 June 2015

மழலையர் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள்: 2015

புற்றீசல் போல பெருகிவிட்ட மழலையர் பள்ளிகளுக்கென எந்தவித வழிகாட்டுதலும் இல்லை... அங்கீகாரம் பெற்றும் பெறாமலும் ஆயிரக்கணக்கான பள்ளிகள் வீட்டின் கொல்லைப்புறங்களில் கூட நடந்துவருகின்றன. இப்பள்ளிகள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில், சென்னை- வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்னும் நண்பர் பொதுநல வழக்கு ஒன்றை அண்மையில் தொடுத்திருந்தார். இந்த வழக்கை கடந்த ஏப்ரல் மாதம் விசாரித்த நீதிமன்றம், மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுப்பதற்காக ஏற்கனவே 6 வார அவகாசம் அளித்திருந்தது. "நீதிமன்றம் பல தடவை உத்தரவிட்ட பிறகும், அந்த விதிமுறைகளை வகுத்து அவற்றை இறுதி செய்வதில் அரசுத் தரப்பில் அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அடுத்த விசாரணைக்குள் (6 வாரத்துக்குள்) இந்த விதிமுறைகளை இறுதி செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும்' என்று கூறி, வழக்கு விசாரணையை ஜூன் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்- 2015, www.tn.gov.inschooleducation என்ற இணையதளத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை வருகிற 22-ஆம் தேதிக்குள் "இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, சென்னை - 600 006' என்ற முகவரிக்கு அனுப்பலாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வரைவு குறிப்பிடும் சில முக்கிய அம்சங்கள் இவைதான்.. நாம் இது குறித்து விவாதித்து விரைவில் நமது கருத்துகளை தெரிவிக்க வேண்டும்..

ஏற்கனவே இருக்கின்ற பள்ளிகள் இவ்விதிமுறைகள் அரசால் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்த 3 மாதங்களுக்குள் பள்ளி அங்கீகாரத்திற்கான விண்ணப்பத்தினை அந்தந்த மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலரிடம் அளித்திருக்க வேண்டும். 

புதிதாகத் தொடங்கப்படக் கூடிய பள்ளிகள் தொடங்குவதற்கு முன் அங்கீகாரம் பெற வேண்டும்..

அங்கீகாரத்திற்கான விண்ணப்பம் கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள் உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் (நர்சரி) மற்றும் அந்தந்த வட்டாரத்திற்கான உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அடங்கிய குழு அப்பள்ளியை பார்வையிட்டு அங்கீகாரம் வழங்கலாமா கூடாதா என்பதை சம்பந்தப்பட்ட மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யும்.. 

மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பரிந்துரை கிடைக்கப்பெற்ற ஒரு மாதத்திற்குள் அங்கீகாரம் வழங்கப்பட்டதற்கான/ நிராகரிக்கப்பட்டதற்கான ஆணை பிறப்பிக்க வேண்டும்..


வழங்கப்படும் அங்கீகாரமானது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.. மூன்று ஆண்டுகள் முடிவதற்கு மூன்று மாதங்கள் இருக்கும்போதே சம்பந்தப்பட்ட பள்ளிகள் மாவட்டத்தொடக்கக் கல்வி அலுவலருக்கு அங்கீகாரத்தைப் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்..

பள்ளிக்கட்டிடம் சொந்தமானதாகவோ அல்லது குத்தகையெனில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.. கண்டிப்பாக சிமெண்ட் காண்கீரீட் கட்டிடமாக இருக்க வேண்டும்.. இரும்பு முள்வேலி கூடாது. குழந்தைக்கு 10 ச.அ. என்ற அளவில் இருக்கவேண்டும்.. வகுப்பறைகள் தரைதளத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.. இருவாசல்கள் கொண்டதாக இருக்கவேண்டும். போதிய அளவிலான கழிப்பறைகள் மற்றும் விளையாடுவதற்கான மைதான வசதிகள் இருக்கவேண்டும்.. 

ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் 15:1 என்ற அளவில் இருக்கவேண்டும். பெண் ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட வேண்டும். அவர்கள் கல்வியியல்/ மனையியல் பட்டய/ பட்டப் படிப்பு முடித்தவர்களாக இருக்க வேண்டும்.

ஜூலை 31 அன்று ஒன்றரை வயது முடிந்துள்ள குழந்தைகளை மட்டுமே பள்ளியில் சேர்க்க வேண்டும்.. வகுப்பிற்கு 15 குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். பள்ளியிலிருந்து 1 கி.மீ.க்குள் வசிப்பிடம் உள்ள குழந்தைகள் மட்டுமே சேர்க்கப்பட வேண்டும். ஒரு குழந்தை 20-30 நிமிடங்களுக்கு மேல் பயணிக்காத அளவில் இருக்க வேண்டும்.