Friday 13 December 2013

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு

பதிவு செய்த நாள் : Dec 10 | 12:17 am

திருப்பூர், -

21-வது தேசிய அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தின் சிறந்த இளம் விஞ்ஞானிகள் 30 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

அறிவியல் மாநாடு

மாநில அளவிலான 21-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் 3 நாட்கள் நடந்தது. இதில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற 209 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் 210 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இதில் ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின், விஜய், மீனா, நந்தினி ஆகியோர் குழந்தை திருமணங்களால் ஏற்படும் மனித ஆற்றல் இழப்பு குறித்து ஆய்வு கட்டுரை சமர்ப்பித்தனர். இது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

இளம் விஞ்ஞானிகள்

மாநாட்டில் சிறந்த 30 ஆய்வுக்கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. இதை சமர்ப்பித்த 30 குழுக்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் 150 பேரும் இளம் விஞ்ஞானிகளாக அறிவிக்கப்பட்டனர். போபாலில் வருகிற 21-ந் தேதி நடைபெறும் தேசிய அறிவியல் மாநாட்டில் 30 குழுக்களின் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

தேசிய மாநாட்டில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்ட மாணவ-மாணவிகளின் குழு தலைவர்கள் விவரம் வருமாறு:-

நெல்லை

தேனி மாவட்டம் ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி என்.லிசா, திருவண்ணாமலை மாவட்டம் மேலராணி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கவுசல்யா, விருதுநகர் நாடார் மகமை பெண் கள் மேல் நிலைப்பள்ளி மாணவி தமிழமுதா, மதுரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரித்தா,

கன்னியாகுமரி கார்மல் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜே.ஜே.அருண், கிருஷ்ணகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கே.கனிமொழி, நெல்லை திருமால்நகர் கலிலியோ துளிர் இல்ல மாணவன் ஆர்.முகிலன், புதுக்கோட்டை கல்ப்நகர் கலிலியோ கலிலி துளிர் இல்ல மாணவர் அடைக்கல அமலன்,

திருப்பூர்

காஞ்சிபுரம் மாவட்டம் வெங்கம்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் தினேஷ், புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் பூ.கபிலன், சேலம் ஜி.டி.நாயுடு துளிர் இல்ல மாணவர் எம்.அப்துல் ரகுமான், ஈரோடு ஜியன்தொட்டி தேசிய குழந்தைதொழிலாளர் பயிற்சி மைய மாணவர் கவின்,

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வாணிவிலாஸ் உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவி நந்தினி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதேஸ்வரன் நகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி சுவேதா, கரூர் மாவட்டம் ஆர்.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யகலா, கடலூர் மாவட்டம் ஜவகர் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகேஷ்ராஜ்,

நீலகிரி, கோவை

திண்டுக்கல் மாவட்டம் சேரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கிருபா, சென்னை மாவட்டம் தி இந்து சீனியர் உயர்நிலைப்பள்ளி மாணவி ரஞ்சினி, விருதுநகர் மாவட்டம் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா, நீலகிரி மாவட்டம் அரிஸ்டோ துளிர் இல்ல மாண வர்கள் முகமதுசெபின், ராமநாதபுரம் மாவட்டம் நேசனல் அகாடமி மவுண்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர் பெனின் தாமஸ், சிவகங்கை மாவட்டம் பாபா அமிர்பாதுசா மேல்நிலைப்பள்ளி மாணவி மீனா நாச்சியார்,

கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி மாணவர் ஜெகதீஸ்ராஜ், தஞ்சாவூர் மாவட்டம் மகரிஷி வித்யாலயா பள்ளி மாணவர் கற்பகமுத்து, வேலூர் மாவட்டம் ராணிபேட்டை தேவ்பெல் பள்ளி மாணவி எஸ்.சாய்பிரியா, அரியலூர் மாவட்டம் தி ஆதித்யா பிர்லா பப்ளிக் பள்ளி மாணவி நவீனா, மதுரை மாவட்டம் மகாத்தா மாண்டச்சோரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி அக்ஷய ரத்னா, திருவாரூர் மாவட்டம் அசோகாசிசூ விகார் மெட்ரிக் பள்ளி மாணவர் ஆகாஸ், திருவள்ளூர் விவேகானந்தா மெட்ரிக்பள்ளி மாணவி கார்த்திக்ஜோதி, நாகப்பட்டினம் ஏ.ஜே.சி. பப்ளிக் பள்ளி மாணவி சுபிக்ஷா.

விஞ்ஞானிகள் மாநாடு

இந்த 30 குழு தலைவர்களில் இருந்து கிராம சூழ்நிலையில் வீட்டு விலங்குகள் ஆற்றல் பயன்பாடு பற்றி மதிப்பீடு மற்றும் அளவிடுதல் என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த புதுக்கோட்டை மாவட்டம் மருதாந்தலை அரசு பள்ளி மாணவர் பூ.கபிலன், இயற்கையாக ஆற்றல் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்த விருதுநகர் தி இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர் டெனித் ஆதித்யா ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் கலந்து கொண்டு தங்கள் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க உள்ளனர்.

Source: Dailythanthi

No comments:

Post a Comment