Thursday 28 August 2014

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கட்டுரை, கவிதைப் போட்டிகள்

By சிவகங்கை
First Published : 27 August 2014 01:58 AM IST

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் செப்டம்பர் 5 ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மாணவர்கள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்களுக்கு கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்டத் தலைவர் சாஸ்தா சுந்தரம் கூறியது: செப்.5 ஆசிரியர் தினத்தையொட்டி மாநில அளவிலான போட்டிகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்துவதென தீர்மானித்துள்ளது.

9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை என் இதயம் கவர்ந்த இனிய ஆசிரியர் என்ற தலைப்பில் ஏ-4 தாளில் 4 பக்கங்களுக்கு மிகாமலும், ஆசிரியர்கள் வகுப்பறையில் வசந்தம் என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமலும், ஆர்வலர்கள் அரசுப்பள்ளிகள் நேற்று.. இன்று.. நாளை.. என்ற தலைப்பில் 5 பக்கங்களுக்கு மிகாமலும் கட்டுரைகளும், கல்லூரி மாணவர்கள், இப்படித்தான் இருக்கவேண்டும் வகுப்பறை என்ற தலைப்பில் 25 வரிகளுக்கு மிகாமல் கவிதையும் எழுதி படைப்புகளை, பி.சாஸ்தாசுந்தரம், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம், 373 சிலம்புதெரு, சிவகங்கை-2 என்ற முகவரிக்கு செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்கலாம்.

மாவட்ட அளவில் ஒவ்வொருபிரிவிலும் தேர்வாகும் முதல் மூன்று படைப்புகள் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதிபெறும். செப்டம்பர் கடைசியில் நடைபெறும் விழாவில் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றார்.

நன்றி: தினமணி நாளிதழ்

No comments:

Post a Comment