Monday 7 October 2013

இன்றைய பாடப்புத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன

சென்னை, செப். 30

‘‘இன்றைய பாடப்புத்தகங்கள் மாணவர்களிடம் இருந்து உலகை அந்நியப்படுத்துகின்றன’’ என்று கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பேசினார்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் மாற்றுக் கல்விக்கான 8வது வாசிப்பு முகாம் செப்டம்பர் 28, 29 ஆகிய நாட்களில் சென்னைகிழக்கு தாம்பரத்தில் நேசனல் பள்ளியில் நடைபெற்றது.

அறிவியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.நீலா தலைமை தாங்கினார். கல்வியாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி வாசிப்பு முகாமினைத் துவக்கி வைத்துப் பேசினார்.

‘‘ ஆசிரியரின் மாணவர், மாணவரின் ஆசிரியர் என்ற நிலை மாறி ஆசிரிய மாணவர், மாணவ ஆசிரியர் என்ற புதிய வகுப்பறை உறவை அறிமுகம் செய்கிறது. இன்றைய பாடப்புத்தகங்கள் உலகை அந்நியப்படுத்துகின்றன. உலகப் பொருட்களை, பிரச்னைகளை மாணவர்களின் உணர்வு நிலைக்குள் கொண்டு செல்ல மறுக்கின்றன’’ என கல்வி குறித்த பல்வேறு புதிய சிந்தனைகளையும் கல்வியின் அரசியலையும் இந்த புத்தகம் முன்வைக்கிறது.

இதில், எழுத்தாளர் ஆயிசா நடராஜன், பேராசிரியர்கள் ராஜூ, சிவக்குமார், விஜயகுமார், பொன்ராஜ் ஆகியோர் புத்தகத்தின் பல்வேறு அத்தியாயங்களுக்கான கருத்துரையாற்றினார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்விமுறையின் இன்றைய பொருத்தப்பாடும் நமது செயல்பாடுகளும் என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். மாநிலத் தலைவர் பேராசியர்.மணி மாற்றுக் கல்விக்கான எதிர்காலத் திட்டங்கள்,செயல்பாடுகள் குறித்து நிறைவுரையாற்றினார்.

மண்டல அளவிலும் மாவட்ட அளவிலும் வாசிப்பு முகாமினை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாநில வாசிப்பு முகாம் டிசம்பர் 28, 29 நாட்களில் திருச்சி மாவட்டத்தில் நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் உதயன் நன்றி கூறினார்.

நன்றி: தின இதழ்

No comments:

Post a Comment