Thursday 23 October 2014

அரசுப்பள்ளி மக்கள்பள்ளி, பாதுகாப்போம், பலப்படுத்துவோம். தமிழகம் தழுவிய பிரச்சார இயக்கம் தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடந்த முப்பத்து நான்கு ஆண்டுகளில் அறிவொளிஇயக்கம்கற்றல் திறன் மேம்பாடுஆசிரியர்களுக்கான இணைசெயல்பாடுகள் உருவாக்குதல்,சமச்சீர் பாடத்திட்ட நூல்கள் குறித்த ஆய்வுகள்போன்ற குறிப்பிடத்தகுந்த பணியைதமிழகத்தில் அடிப்படைக் கல்வியில் மேற்கொண்டுள்ளது.

தற்போதும் ஆசிரியர்களுக்கான பல்வேறுதிறன் மேம்பாட்டு பயிற்சிகள்ஆசிரியர்இணையம்வாசிப்பு இயக்கம் என தனது பணியை தொடர்ந்து நடத்தி வருகிறதுஅரசின்கொள்கைகளாலும்புற்றீசல் போன்ற தனியார் பள்ளிகளின் வளர்ச்சியாலும் காமராஜர் கட்டமைத்த பொதுப்பள்ளி முறைமை என்னும் அரசுப்பள்ளி முறைமை முற்றிலும் செயல்இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுஒரு நாட்டின் சமூக பொருளாதார அரசியல்நடவடிக்கைகளின் ஆரோக்கியமான செயல்பாட்டுக்கு அடிப்படையாக அமையவேண்டியவலுவான அரசுப்பள்ளிகள் முற்றிலும் செயல் இழக்கும் நிலையில் உள்ளதுதன்கொள்கைகளாலும் தனியர்மயமாதலாலும் தான் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகுறைந்துள்ளது என்பதை மறந்துசென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட  மாணவர் சேர்க்கைகுறைவாக  உள்ள ஆறு பள்ளிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் நிலைக்கு சென்றுள்ளதுதமிழக அரசு .இத்தகைய போக்கு மேலும் மேலும் அரசுப் பள்ளிகளை சீரழிக்கவே பயன்படும்.உலகமயமாக்கலுடன் ஒட்டிப் பிறந்த தனியார்மயத்திற்கு முன்பே தமிழகத்தில் மெட்ரிக்பள்ளிகள் என்ற பெயரில் தனியார்மயம் தொடங்கிவிட்டது .கடந்த முப்பது ஆண்டுகளில்தனியார் பள்ளிகள் முற்றிலும் லாபத்தை முன்னிறுத்தும் வழியில் செயல்பட்டுஉண்மையானகல்வியியல்கற்றல் நோக்கங்கள் நிராகரிக்கப்பட்டுமதிப்பெண்களே கல்விஅல்லது அதுவேதரம் என நிலைநிறுத்திதனியார் - அரசு என எந்த வேறுபாடும் இல்லாமல் எல்லாப்பள்ளிகளும் மதிப்பெண் பின்னால் ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுதொடக்க நடுநிலைப்பள்ளிகள் சில ஆயிரம் வரை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதும்மூடப்படும் நிலையில்உள்ள கிராமங்களில் வாழும் ஏழைக் குழந்தைகள் மீண்டும் எழுத்தறிவு அற்ற ஒரு சமூகம்உருவாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.

             தாய் மொழி வழிக் கல்வியிலேயே கற்றல் மேம்பட்டுபடைப்பாற்றல் திறன்அத்துடன் ஆங்கில மொழிப் புலமையும் அதிகரிக்க செய்ய முடியும் என்பதற்கு தமிழகமே மிகச்சிறந்தமுன் உதாரணமாக விளங்கியதுசர் சி வி ராமன்ராமானுஜன்சிங்கரவேலர் எனத் தொடங்கிமுன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்மயில் சாமி அண்ணாதுரை என பலஉதாரணங்களை கூறிக் கொண்டே செல்லமுடியும்.  ஆனால் ஆங்கிலம் கற்கவே அனைத்துப்பாடங்களையும் குருட்டு மனப்பாடம் செய்யும் நிலைக்கு தமிழகம் வந்துவிட்டதுமாணவர்சேர்க்கைக்காக ஆங்கில வழிக் கல்வியை அரசு அறிமுகம் செய்த பின்னர் இது பற்றியும்பேசியாக வேண்டும்எனவே தமிழக பள்ளிக் கல்வியை சீரழித்துள்ள அரசின் கொள்கைகள்தனியார் பள்ளிகளின் வணிகமயம்என எல்லாவற்றையும் விமர்சனத்திற்கு உட்படுத்தி தமிழகபள்ளிக் கல்வியை காக்கும் ஒரு பேரியக்கத்தை சர்வதேச எழுத்தறிவு தினமான 08.09.2014ன்று தொடங்கியது.

இந்த இயக்கத்திற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் "அரசுப் பள்ளி மக்கள் பள்ளி.பாதுகாப்போம்பலப்படுத்துவோம்என்னும் பெயரைச் சூட்டி உள்ளதுதமிழக மக்களிடம்இச்செய்தியை கொண்டு சேர்க்க ஐந்து பிரசுரங்களை வெளியிட உள்ளோம்.  மேலும் அரசுப்பள்ளிகளை காக்க அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மழலையர் வகுப்புகள் தொடங்கிடவேண்டும்தனித்தனி வகுப்பறைகள்வகுப்பிற்கொரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.சுத்தமான குடிநீர்சுகாதாரமான கழிப்பறைகள் இவற்றை உறுதிப்படுத்திட வேண்டும்,செயல்வழிக்கற்றல்தொடர்மதிப்பீட்டு முறைகளை செழுமைப்படுத்த வேண்டும்நலத்திட்டஉதவிகளுக்கு தனி அலுவலர்களை நியமித்திடவும்கல்வியில் தனியார்மயத்தைக் கைவிடவேண்டும்அதிக நிதி ஒதுக்கி அரசுப்பள்ளிகளைப் பாதுகாத்து பலப்படுத்திட வேண்டும்.உண்மையான சமச்சீர் கல்விமுறையினை அமல்படுத்திட வேண்டும்மத்திய அரசின் “அரசுதனியார் கூட்டுமாதிரிப் பள்ளித் “திட்டத்தை நிரந்தரமாக நிராகரிதத்திட வேண்டும் போன்றகோரிக்கைகளை அரசு செய்ய வேண்டுமென வலியுறுத்தி  பத்து லட்சம் கையெழுத்துக்களைபெற்று அரசுக்கு சமர்பிக்க உள்ளோம்அரசுப்பள்ளிகளைப் பாதுகாக்க  அனைத்துதரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும்ஆசிரியர்மக்கள் பங்கேற்பை உறுதிசெய்திடவும்வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல்கட்சிகளும்அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவது குறித்து தேர்தல் அறிக்கையில் விரிவாக இணைக்கவேண்டும் என்பதும் இப்பிரச்சார இயக்கத்தின் நோக்கமாகும்.

இவ்வியக்கத்திற்கு வலு சேர்க்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகை ஆசிரியர் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் என இக் கொள்கைக்கு உடன்படும் அனைத்து அமைப்புகளையும் ஒன்று திரட்டி செயலாற்ற திட்டமிட்டுள்ளோம். மாவட்டங்களில்கையெழுத்து இயக்கம், நூல்விற்பனை கருத்தரங்குகள்மண்டல மாநாடுகள் எனத் தொடர்ந்துகொண்டே இருக்கும். அக்டோபர்,நவம்பர் மாதங்களில் அரசுப் பள்ளி அவலத்திற்குகாரணமானவற்றை கண்டறிய கள ஆய்வுகள் நான்கு தலைப்புகளில் நடத்தப்படும்டிசம்பர்மாதத்தில் ஆய்வு முடிவுகள் பரிசீலிக்கப்பட்டு அதற்கான தீர்வுகளையும் ஆலோசனைகளையும்அரசுக்கு சமர்ப்பிப்பதுஅதனை நடைமுறைப்படுத்தக் கோருவதுஅதனை வீதி நாடகங்கள்,பாடல்கள் உள்ளிட்ட கலைப்பயணம் வழியாகவும் மாநிலம் முழுக்க எடுத்துச் செல்வது எனஇந்தப் பிரச்சார இயக்கத்தில் திடமிடப்பட்டுள்ளது.


அதில் முதல் கட்டமாக பேரா.நா.மணி எழுதிய ’மீண்டெழும் அரசு பள்ளிகள்’ என்னும்நூலை பேரா.வசந்தி தேவி வெளியிட தமிழ்நாடு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்அருமைநாதன் பெற்றுக்கொண்டார். ’இவைகளா கனவுப் பள்ளிகள்’ என்னும் தலைப்பில்வணிக மய பள்ளிகளின் செயல்பாட்டை விமர்சித்து பேராராஜமாணிக்கம் எழுதிய நூலைமுனைவர். ச. முத்துகுமரன் முன்னாள் துணைவேந்தர் வெளியிட இந்திய மாணவர் சங்கமாநில துணைத்தலைவர் ஆறுமுகம் பெற்றுக்கொண்டார்.  பத்து லட்சம் கையெழுத்து பெரும்இயக்கத்தை பேரா...அறவாணன் துவக்கி வைத்தார்இந்த மாநில அளவிலான பிரச்சாரதுவக்கவிழா நிகழ்வில்  இவ்வியக்கத்தின் மாநில தலைவர் மணி, மாநிலஒருங்கிணைப்பாளர் தேனி.சுந்தர்மாநில நிர்வாகிகள் உதயன், சி. இராமலிங்கம், சென்னைமாவட்ட அறிவியல் இயக்க செயலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்நிகழ்ச்சிஏற்பாடுகளை  சென்னை மாவட்ட அறிவியல் இயக்க குழுவினர் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment