Thursday 23 October 2014

கல்வி உரிமைச் சட்டத்தை முறையாக அமுல்படுத்துக : அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்


ல்வி உரிமைச் சட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக அமுல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அறிவியில் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்டப் பொதுக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமையன்று மாவட்டத் தலைவர் அ.மணவாளன் தலைமையில் புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் எம்.வீரமுத்து, பொருளாளர் க.ஜெயபாலன் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலப் பொருளாளர் எல்.பிரபாகரன், துணைத் தலைவர் எஸ்.டி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மாவட்ட துணைச் செயலாளர் சி.எஸ்.வள்ளல் நன்றி கூறினார்.

மங்கள்யான் சாதனை குறித்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.கவனகன் நழுவுப் படக்காட்சிகள் மூலம் விளக்கிப் பேசினார். முன்னதாக, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் துளிர் இல்லக் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் பயிற்சி நடைபெற்றது. 

கூட்டத்தில் கல்வி உரிமைச்சட்டத்தை அனைத்துப் பள்ளிகளிலும் முறையாக அமுல்படுத்துவதை மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை முறைப்படுத்த வேண்டும். செவ்வாய்க் கிரகத்திற்கு மங்கள்யான் செயற்கோளை அனுப்பி சாதனை புரிந்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு கூட்டத்தில் பாராட்டுத் தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், மங்கள்யான் சாதனை குறித்து மாவட்டம் முழுவதும் பிரச்சாரம் செய்வது எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டன.

நன்றி: நக்கீரன்

No comments:

Post a Comment