Monday 2 March 2015

குழந்தைகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்றால் ஏன் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்?

குழந்தையின் கேள்வியால் அதிர்ந்த போப்

மணிலா, ஜன. 19-


பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த போப் பிரான்சிஸ்யிடம், ஒரு சிறுமி எழுப்பிய கேள்வியால் அதிர்ந்த போப்பிரான்சிஸ் , சிறிது நேரம் நிலைகுலைந்த நிலையில் இருந்தார் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது.பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள கத்தோலிக்க பல்கலைக்கழகத்தில் போப் பிரான்சிஸ் சிறப்புரை வழங்க சென்றிருந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினரிடையே போப் உரையாற்ற விருந்தார்.

அப்போது அங்கு வந்த வீடில்லா ஏழை சிறுமி (12) ஒருவர், மைக்கை பிடித்து கண்ணீர் மல்க போப்பிடம் கேள்வி ஒன்றை எழுப்பினார். “குழந்தைகள் கடவுளுக்கு ஒப்பானவர்கள் என்கின்றனர். ஆனால், அந்த குழந்தைகள் தான் போதை தரும் தீயப்பழக்கங்களுக்கும், பாலியல் வன் கொடுமைகளுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள். எந்த தவறும் செய்யாத இவர்களை கடவுள் ஏன் இந்த நிலைக்கு உள்ளாக்கி இருக்கிறார்?’’ என கேட்டார்.

இதனை சற்றும் எதிர்பாராத போப், அந்த சிறுமியை அருகில் அழைத்து அன்போடு கட்டி தழுவி கொண்டுள்ளார். இதன்பின் சிறிது நேரம் கழித்து கூட்டத்தை நோக்கி, இந்த குழந்தை தான் முதன் முதலாக இப்படி ஒரு பதிலளிக்க முடியாத கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார். அவரால் தன்னுடைய நிலையை வார்த்தையால் வெளிப்படுத்த முடியாமல் போனாலும், அவரது கண்ணீரால் வெளிப்படுத்தி விட்டார். அந்த சிறுமியை பார்த்து நான் வருத்த ப்படுகிறேன் என போப் கூறியுள்ளார்.

மேலும் அவர் தன் உரையில் குழந்தை தொழிலாளர்கள், ஆதரவற்ற குழந்தைகள், பாலியல் கொடுமைக்கு தள்ளப்பட்ட குழந்தைகள், வறுமையில் வாடும் குழந்தைகள் மற்றும் தெருக்களில் அடிமைகளை போல் நடத்தப்படும் குழந்தைகளிடம் நீங்கள் அனைவரும் என்ன கற்றுக் கொண்டீர்கள் என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் என அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களை பார்த்து போப் வேண்டுகோள் விடுத்தார்.

No comments:

Post a Comment