Wednesday 6 November 2013

மாதிரிப்பள்ளிகள் - யாருக்கானது? ஜோ. ராஜ்மோகன்

மத்திய அரசு நாடு முழுவதும் பின் தங்கியுள்ள பகுதிகளை தேர்வுசெய்து தனி யார் பங்களிப்புடன் மாதிரிப்பள்ளிகளை தொடங்குவதற்கு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றது. நவீன தாராளமய கொள்கையினை தீவிரமாக கடைபிடித்து வருகின்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை கடும் வணிகமயமாக்கியுள்ள நிலை யில் 2500 மாதிரிப்பள்ளிகளை அரசு தனியார் கூட்டு (ஞஞஞ) என்ற திட்டத்தின் அடிப்படை யில் துவங்கிட தனியார் மற்றும் கல்வி முத லாளிகளை விண்ணப்பிக்குமாறு அறிவிக் கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதுவரை 400க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிறுவனம் 20 பள்ளிகள் வரை துவங்கி நடத்திட அனுமதியினை வழங்கியுள் ளது. இப்பள்ளிகள் துவங்குவதற்கான நிலம் முழுவதையும் அரசு தேர்வு செய்து கொடுக்க உள்ளது. மேலும் இப்பள்ளிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீட்டையும் உறுதிசெய்திட உள்ளது. சிபிஎஸ்இ (மத்திய பள்ளிக் கல்வி வாரியம்) பாடத்திட்டத்தின் அடிப்படையில் இப்பள்ளி கள் இயங்கும். மேலும் இப்பள்ளிகளில் 60 சதவீத மாணவர்களுக்கான கட்டணங்களை பள்ளி நிர்வாகமே எவ்வளவு வேண்டுமானா லும் தீர் மானித்துக்கொள்ளலாம். 40 சதவீத மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டின் அடிப்படை யில் இங்கு சேர்க்கப்படுவர். இவர்களுக்கான கட்டணங்களில் பெரும் பகுதியை அரசு ஏற்கும் எனவும் ஒருபகுதி கட்டணங்களை மாணவர் கள் செலுத்திடவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மாநில அரசின் அனுமதியின்றி மத்திய அரசே நேரடியாக தனியார் முதலாளிகளை மாதிரிப் பள்ளிகள் நடத்தி அனுமதிக்கும் இந்த நடவடிக்கை மாநில அரசின் சுயாட்சி உரிமையை குழிதோண்டி புதைக்கும் நட வடிக்கை. ஆகவே மாநில அரசுகளின் சுயாட்சி உரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திட வேண்டும். தொடர்ந்து மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக வலு வாக குரல் கொடுத்து வரும் தமிழக முதல்வர் இந்த நடவடிக்கையை எதிர்த்து உறுதி யோடு குரல்கொடுத்திட வேண்டும். இந்திய நாட்டில் அவசரநிலை அமலில் இருந்த போது கல்வி மாநிலப்பட்டியலி லிருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. இன்று வரை இதே நிலை தொடர்கிறது. கல் வியை மிக விரைவாக வணிகமயமாக்கிட வும், அதற்கேற்றாற்போல் சட்டத்தை வளைத்திடவுமே மத்திய அரசு இந்த அதி காரத்தை பயன்படுத்தியுள்ளது.

வரலாற்றை கூர்ந்து கவனித்து வரும் எவருக்கும் தெளிவாக புலப்படும். புதிய பொருளாதாரக் கொள்கை அமலாக்கப்பட்ட 1980களுக்கு பிறகே கல்வி தனியார்மயமானதன் வேகம் மிகவும் அதிகரித்துள்ளது. அது வரை கல்வி என்பது அரசின் கடமையாக கருதப் பட்டது. சில செல்வந்தர்கள் துவங்கிய பள்ளி கள் அரசின் உதவியோடு, வர்த்தக நோக்க மற்று இயங்கிவந்தன. இந்த நிலைமை 1980 களுக்கு பிறகே மாறத்துவங்கியது. புற்றீசல் கள் போல் மெட்ரிக்பள்ளிகள் துவங்கப்பட் டன. பள்ளியின் கட்டமைப்பு தகுந்த அள வுக்கு உள்ளதா? விளையாட்டு மைதானம் உள்ளதா? போதிய ஆசிரியர்கள் உள்ளனரா? இதுபோல பல கேள்விகளுக்கு முறையான பதிலின்றி பட்டிதொட்டிகள் எங்கும் மெட்ரிக் குலேஷன் பள்ளிகள் துவங்க அனுமதிக்கப் பட்டது. இங்கு ஆங்கில வழிக்கல்வி பயிற்று விக்கப்பட்டதால் பெற்றோரும் தங்கள் குழந் தைகளை அப்பள்ளிகளில் சேர்க்க துடித்த னர். இதன் விளைவாக மெட்ரிக்பள்ளிகள் பிர பலமடைந்தன. “ஆங்கிலமே அறிவு” என்ற திட்டமிட்ட கருத்துருவாக்கமும் செய்யப்பட் டது.

தாய்மொழி வழிக்கல்வியின் பயிற்றுவிக் கப்பட்ட அரசுப்பள்ளிகளை மத்தியதர வர்க்கம் முழுமையாக புறக்கணித்ததோடு அரசு பள்ளிகள் மோசம் என்ற தவறான கருத் தையும் திட்டமிட்டே உருவாக்கினர். இதன் பின்னரே தமிழகத்தில் பள்ளிக் கல்வி கடும் வணிகமயமாக்கப்பட்டது.வசதிக்கேற்ற வகை வகையான பள்ளி களும் துவங்கப்பட்டன. மாநில அரசுப்பள்ளி கள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், ஆங் கிலோ இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் மற்றும் மத்திய அரசால் நேரடியாக நடத்தப்படும் பள்ளிகள், மத்திய அரசின் அனுமதிபெற்ற (சி.பி.எஸ்.இ) தனியார்பள்ளி கள் இவைதவிர பன்னாட்டு உண்டு, உறை விடப் பள்ளிகள் என பல்வகை பள்ளிகளும் தமிழகத்தில் இயங்கி வருகின்றன. இப்பள்ளி கள் சமூக ஏற்றத்தாழ்வை மேலும் வளர்த் தெடுக்கவே செய்கின்றன.

ஆகவே தமிழகத் தில் சமத்துவமான வாய்ப்பினை உருவாக் கிடும் வகையில் சமச்சீர் கல்விக்கான நீண்ட போராட்டத்தை இந்திய மாணவர் சங்கமும், ஜனநாயக இயக்கங்களும் நடத்தியதன் விளைவாக மனமில்லாத ஆட்சியாளர் களால் வேறுவழியின்றி சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது சமச்சீரான பாடத்திட் டம் பாடப்புத்தகம் மட்டுமே நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. சமச்சீர் கல்வியின் முக் கியமான பரிந்துரைகளை நடைமுறைப்படுத் தாமல் நீர்த்துப்போகச் செய்ய தொடர் முயற்சி களை மாநில அரசு மேற்கொண்டது.சமச்சீர் கல்வி திட்டத்தின்படி மாநில அரசுப்பள்ளிகள், மெட்ரிக்பள்ளிகள், ஆங் கிலோ- இந்தியன் பள்ளிகள், ஓரியண்டல் பள்ளிகள் ஆகிய நான்கு வாரியங்களும் கலைக்கப்பட்டு அதிகாரமுள்ள ஒரே வாரிய மாக உருவாக்கப்பட வேண்டும். ஆனால் ஒரே பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டதை மெட்ரிக்பள்ளிகள் விரும்பவில்லை.

ஆகவே புதிதாக துவங்கப்படும் பள்ளிகள் எதுவும் மெட்ரிக் பள்ளிகளாக இருப்பதில்லை. தங்க ளது வியாபாரம் தடைபடாமல் இருக்க மத்திய அரசின் அனுமதிபெற்ற சிபிஎஸ்இ பள்ளிகளாகவே துவங்கப்படுகின்றன. பல மெட்ரிக் பள்ளி களும் சிபிஎஸ்இ பள்ளிகளாக மாற்றுவதற் கான முயற்சியில் உள்ளன. ஆகவே இப் பள்ளிகளின் வியாபாரத்தை கட்டுப்படுத்து வதும், முறைப்படுத்துவதும் இன்றைய அவ சியமாகின்றது. புதிதாக துவக்கப்படும் சர்வ தேச உண்டு, உறைவிடப்பள்ளிகள் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களைப் பார்த்தாலே அவற்றின் வணிக நோக்கம் தெளிவாகத்தெரியும்.

தேவை - பொதுப்பள்ளி முறை

நூறு சதவீதம் கல்வி கொடுப்பதில் வெற்றி கண்ட நாடுகள் பெரும்பாலும் பொதுப்பள்ளி முறையைத்தான் பின்பற்றியுள் ளன. உலக நாடுகளின் அனுபவத்திலிருந்து நமது ஆட்சியாளர்கள் பாடம்கற்க மறுக்கின் றார்கள். நமது நாடு விடுதலையடைந்த பின்னர் அரசு நியமித்த கல்வி குறித்த குழுக் கள் யாவும் பொதுப்பள்ளி முறையை உரு வாக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள் ளன. கோத்தாரிக்குழு (1964-66), இராம மூர்த்தி குழு 1991, யஷ்பால்குழு 1993 ஆகி யவை பொதுப் பள்ளி முறையை விரைந்து கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தியுள் ளன. 1986ல் வடிவமைக்கப்பட்டு 1992ல் இறுதிப்படுத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசிய கல்விக் கொள்கை பொதுப்பள்ளி முறை குறித்து சாதி, மதம், இனம், இடம் வேறுபாடு இன்றி எல்லா மாணவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக் கும் வாய்ப்பை உருவாக்குவது என விளக்க மளிக்கிறது. பொதுப்பள்ளி முறையில் தரம் தாழ்ந்து போகும் என்ற கருத்து திட்டமிட்டு பரப்பப்பட்டுள்ளது. இது உண்மைக்கு புறம் பானது.

தனியார் பள்ளிகளையும் பொதுப் பள்ளி முறையில் இணைய வழிவகையை யும் செய்யமுடியும்.அருகமைப்பள்ளிகளை கொண்ட பொதுப் பள்ளி முறையே சமுதாயத்தை முழுமையாக ஊடுருவும் இப்பள்ளி முறையே சமுதாயத் தை உயர்த்தும். ஆனால் நம்மை 66 ஆண்டு காலமாக ஆட்சி செய்துள்ள காங்கிரஸ், பாஜக ஆட்சியாளர்கள் இந்திய நாட்டிலுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முழுமை யான பள்ளிக்கல்வியை கொடுக்க முன்வர வில்லையே ஏன்? இவர்கள் முதலாளி களின் வர்க்க நலனை பாதுகாக்க ஆட்சி அதிகாரத்தை இதுவரை பயன்படுத்தியவர் கள். ஆகவே அவர்களது வர்க்க நலனி லிருந்தே கல்விக்கொள்கையும் வகுக்கப்பட் டது.

இவர்கள் நாட்டின் கடைகோடியிலுள்ள ஏழைக்குழந்தையின் கல்வி குறித்து எப்படி அக்கறை கொள்வார்கள்?கல்வி வணிகமயத்தை தீவிரப்படுத்தும் நோக்கோடுதான் மத்திய அரசு மாதிரிப்பள்ளி களை தனியார் பங்களிப்போடு துவங்குவதற் கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மத்திய அரசு கல்வி கொடுக்கும் பொறுப்பி லிருந்து முழுமையாக விலகிக்கொள்ளவே முயற்சிக்கிறது.ஏற்கனவே மாநில அரசு தமிழகத்தின் பின் தங்கிய பகுதிகளில் மாதிரிப்பள்ளிகளை நடத்தி வருகின்றது. 2010 ஜுன் 15 காமராஜர் பிறந்த நாள் அன்று தமிழக அரசு பின்தங்கிய ஒன்றியங்களில் 18 அரசு மாதிரிப் பள்ளி களை துவக்கியது.

இப்பள்ளிகளும் போது மான நிதி ஒதுக்கீடு இல்லாமல் அடிப்படை வசதிகளற்று வேறுமாதிரியான பள்ளிக ளாகவே காட்சியளிக்கின்றன.அரசு பள்ளிகளை பாதுகாப்பதோடு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து வளர்த் தெடுக்க வேண்டியது இன்றைய அவசிய அவசரம். ஆகவே மத்திய அரசின் நிதி உதவி யுடன் தனியாருக்கு இடமளிக்காமல் மாநில அரசே மாதிரிப்பள்ளிகளை துவங்கிட வகை செய்வதே, ஏழைக்குழந்தைகளுக்கு கல்வி அளிக்கும் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றும்.

(கட்டுரையாளர்: இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர்)
நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment