Friday 11 July 2014

தமிழ்நாடு : மோசமான நிலை - கே. சத்யநாராயன்

குறிப்பிட்ட ஆண்டில் கல்விக்காக எத்தனை சதவிகிதம் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது, எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டன, பள்ளிக் கட்டட உருவாக்கத்துக்கு எவ்வளவு செலவானது போன்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும். சரி, இந்தப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களின் தரம் என்ன? ஒரு மாணவன் வகுப்பறையில் இருந்து உண்மையில் என்னென்ன கற்றுக்கொள்கிறான்?
தமிழ்நாட்டின் கல்வித் தரம் குறித்து ஆறு மாதங்களுக்கு முன்பு இரண்டு ஆய்வறிக்கைகள் வெளிவந்தன. அவற்றின் முடிவுகள் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளன.
அறிக்கை 1:
PISA (Programme for International Student Assessment), 2011
உலகம் முழுவதும் 73 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வுகளை மேற்கொண்டது. இந்தியாவில், தமிழ் நாடு மற்றும் இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 5,000 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 2 மணி நேரம் தேர்வு எழுதினார்கள்.
  • தமிழ்நாட்டில் 100 மாணவர்களில் 17 பேரால் மட்டுமே சரளமாக வாசிக்கமுடிகிறது. 15 பேருக்கு மட்டுமே அடிப்படை கணிதம் தெரிந்திருக்கிறது. அடிப்படை அறிவியல் அறிவும் 15 பேருக்கு மட்டுமே இருக்கிறது.
  •  முதல் வரிசையில் இருக்கும் சீனாவோடு ஒப்பிட்டால்தான் தமிழ்நாடு எந்த அளவுக்கு பின்தங்கியிருக்கிறது என்பது தெரியும். சீனாவில் 100 பேரில் 95 பேரால் சரளமாக வாசிக்கமுடியும். 95 பேருக்கு அடிப்படை கணிதமும் அறிவியலும் தெரியும்.
  • முடிவு: தேர்வில் பங்கேற்ற 73 நாடுகளில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம், 72.
அறிக்கை 2:
ASER (Annual Szazus of Educazion Reporz), 2011
ப்ரீத்தம் என்னும் தனியார் தொண்டு நிறுவனத்தின் 7வது வருடாந்தர ஆய்வறிக்கை இது.
  • கிராமப்புறங்களில், 3வது வகுப்பில் படிக்கும் 70 சதவிகித மாணவர்களால் 1ம் வகுப்புக்குண்டான விஷயங்களைப் படிக்கமுடியவில்லை. 5ம் வகுப்பு மாணவர்களில் 65 சதவிகிதம் பேரால் 2ம் வகுப்புக்கான விஷயங்களை படிக்கமுடியவில்லை. 20 சதவிகிதம் பேரால் 100 வரையிலான எண்களைக் கண்டறியமுடியவில்லை. 80 சதவிகிதம் பேரால் வகுத்தல் கணக்கைப் போட முடியவில்லை.
  • முடிவு: தமிழ்நாட்டில் கல்வித் தரம் மிகவும் கவலையளிக்கும்படி இருக்கிறது என்று தொடர்ந்து இந்த நிறுவனம் ஆதாரபூர்வமாகச் சொல்லிவருகிறது என்றாலும் தமிழ்நாடு அரசு ஒவ்வொருமுறையும் இந்த அறிக்கையை உதாசீனம் செய்துவருகிறது.
அபாயகரமான இந்த நிலைமைக்கு அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளும் இரண்டுமே சமஅளவில் பொறுப்பேற்கவேண்டும்.

No comments:

Post a Comment