Tuesday 25 February 2014

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டுத் திட்டத்தின் படி மாணவர் சேர்க்கைக்கு தமிழக அரசின் புதிய வழிகாட்டி அறிக்கை:

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் (சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட) ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தங்கள் இருப்பிடங்களுக்கு அருகே இருக்கும் பள்ளிகளில் இந்த மாணவர்கள் சேருவதற்கு தகுதி உடையவர். தொடக்கப்பள்ளி என்றால் ஒரு கிலோ மீட்டர், நடுநிலைப்பள்ளி என்றால் 3 கிலோ மீட்டர் என்ற தூர எல்லை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
25 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டது.  அந்த குழு சமர்ப்பித்த வழிகாட்டி நெறிமுறைகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அந்த வழிகாட்டி நெறிமுறைகள் வருமாறு:
வழிகாட்டி நெறிமுறைகள்
  1. தனியார் பள்ளிகள் மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தயாரிக்க வேண்டும்.
  2. 25 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்? என்பதை அன்றைய தினமே கணக்கிட்டு பள்ளியின் அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும்.
  3. மாணவர் சேர்க்கையின் விண்ணப்ப படிவங்கள் ஒரே வடிவில் இருக்க வேண்டும். விண்ணப்பம் எப்போது வழங்கப்படும் என்ற அறிவிப்பை மே மாதம் 2-ந் தேதி வரை வெளியிட வேண்டும்.
  4. மே மாதம் 3-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கபட வேண்டும்.
தேர்வு பட்டியல் வெளியீடு
  1. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே மாதம் 9-ந் தேதி மாலை வரை பெற்றுக் கொள்ள வேண்டும்.
  2. விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டதிற்கு பெற்றோருக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்பட வேண்டும்.
  3. மே மாதம் 11-ந் தேதி தகுதியான விண்ணப்பங்களுக்கு உரிய நபர்களின் பெயர்களை அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள நபர்களின் விவரங்களையும் அதற்கான காரணத்தையும் இதே போன்று வெளியிட வேண்டும்.
  4. தகுதியான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 25 சதவீதத்திற்கு மேல் இருந்தால் ரேண்டம் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய வேண்டும். ரேண்டம் முறையை மே மாதம் 14-ந் தேதி செய்து, தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் பட்டியலை அன்றைய தினமே வெளியிட வேண்டும்.
கல்வி அதிகாரிக்கு தகவல்
  1. மேலும், கூடுதலாக 10 சதவீத காத்திருப்போர் பட்டியல் ஒன்றும் வெளியிடப்பட வேண்டும்.
  2. மாணவர் சேர்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களை மாவட்ட கல்வி அதிகாரிக்கு மே மாதம் 20-ந் தேதி தெரிவிக்க வேண்டும்.
நன்றி: http://www.teachersofindia.org/2013

No comments:

Post a Comment